பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள் |
பாக்டீரியா வாடல் நோய்: சூடோமோனாஸ் சொலானாசியேரம்
அறிகுறிகள்
- இலையில் மிதமான அறிகுறிகள் தோன்றும் அவை, வாடல், குட்டை வளர்ச்சி, இலைப்பரப்பு மஞ்சளாதல், முடிவில் முழுச்செடியும் மடிந்துவிடும்
- முதலில் கீழ்ப்புறம் உள்ள இலைகள் தொங்கி, வாடல் ஆரம்பிக்கும்
- வாஸ்குலர் திசுக்கள் பழுப்பு நிறமாக மாறுகின்றன
- நோய் தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பாக்டிரியல் திரவம் கசிந்துக் கொண்டிருக்கும்
- செடிகள் மதிய வேளையில் வாடல் நோய் அறிகுறிகளை காண்பிக்கும். இரவில் சரியாகிவிடும். ஆனால், விரைவில் மடிந்து விடும்
|
 |
 |
 |
ஆரோக்கியமான தாவரம் |
பாதிக்கப்பட்ட தாவரம் |
|
கட்டுப்பாடு
- பந்த் சாம்ராட்வகை நோய் தாங்கக் கூடிய ரகம்
- குளிர் மண்டல காய்கறி வகைகளான காலிபிளவருடன் பயிர் சுழற்சியை மேற்கொள்ள வேண்டும்
- வயலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
- வேர்முடிச்சு நூற்புழுக்கள் இருந்தால், இந்த நோய் பரவலாகக் காணப்படும்.
|
|