பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்

கழுத்தழுகல் நோய்

அறிகுறிகள்

  • இந்த நோய் எப்பொழுதாவது அதிகளவில் தோன்றும்
  • தண்டின் கீழ்ப்பகுதி தாக்கப்படும்
  • தண்டின் உள்ளே உள்ள திசுக்கள் காய்ந்து விடும்
  • கீழேயுள்ள திசுக்கள் காய்ந்து, செடிகள் உருக்குலைந்து விடும்
  • மண்பரப்புக்கு சற்று அருகில் தண்டின் மீது சாமசலியா மற்றும் ஸ்களிரோசியா காணப்படலாம்
  • செடியின் திறன் குறையும். தண்டைச் சுற்றி நீர் தேங்கியிருக்கும்
நோயற்ற இலைகள் 
நோயுள்ள இலைகள்

கட்டுப்பாடு

  • 4 கி  டிரைக்கோடெர்மா விரிடி /கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • மான்கோசெப் 2 கி/லிட்டர் தெளிக்கவேண்டும்
  • நோய் தாக்கப்பட்ட செடியின் பகுதிகளை அழிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016