பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டு மற்றும்  காய்ப்புழு: டைக்கோகுரோசிஸ் (கோனோகித்தீஸ்)பங்க்டிஃபெராலிஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் மலராத மொக்குகளையும் இலைத்திசுக்களையும் சாப்பிடும்.
  • புழுக்கள் பூச்சரத்தினை துளையிட்ட சாப்பிடும் அதனால் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து விடும்.
  • பிஞ்சுகள் மற்றும் இளம் விதைகளையும் சாப்பிட்டுக் காய்களை பொக்குகளாக மாற்றி விடுகின்றன.
  • வளர்ந்த புழுக்கள் போலித்தண்டுகளை துளையிட்ட அதன் மையப்பகுதியை சாப்பிடும். இதனல் நுனியில் உள்ள இலைகள் காய்ந்து நடுக்குருத்து காய்தல் என்றத் தெளிவான அறிகுறியை ஏற்படுத்தும்.
  • நடுக்குருத்து காய்தல் என்றத் தெளிவான அறிகுறியை ஏற்படுத்தும்.
  • புழுக்கள் குருத்துக்களை குடைந்து தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளியிருக்கும்.
  • இப்பூச்சியின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருக்கும். இருப்பினும் அதிகச் சேதாரம் டிசம்பர் - ஜனவரி, மார்ச்-ஏப்ரல், மே-ஜீன் மற்றும் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் இருக்கும்.
  • http://www.spices.res.in/package/cardamom/shoot.jpg C AaConogethes_punctiferalis
    நடுக்குருத்து காய்தல் புழு பூச்சி

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இளஞ்சிவப்பு, தட்டையான நீள்வட்ட வடிவில் தனியாகவோ அல்லது குவியலாகவோ இளம் தளிர்களின் மீது இடும்.
  • புழு: இளஞ்சிவப்பு உடலையும், தலை மற்றும் முன் மார்புக்கவசப் பகுதியும் பழுப்பு நிறத்திலும், உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் கொண்டிருக்கும்.
  • கூட்டுப்புழு: பட்டுக்கூட்டில் தண்டில் உள்ள இலைகளில் இருக்கும்.
  • பூச்சி: அந்துப்பூச்சி சிறியதாக இருக்கும்.
  • மஞ்சள் நிற இறக்கையில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பகல் நேரங்களில் அந்துப்பூச்சி இலையின் அடிப்பரப்பில் அமர்ந்திருக்கும் அவற்றை பூச்சி வலைக் கொண்டு சேகரித்து அழிக்கவும்.
  • நடுக்குருத்து காய்த்ல் அறிகுறி உள்ள செடிகளை களைந்து அகற்றவேண்டும்.
  • பூச்சியின் கழிவுப்பொருட்கள் வெளித்தள்ளியிருக்கும் தூர்களைக் களைந்து அகற்றவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016