பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மிளகாயின் பேக்டீரிய இலைப்புள்ளி நோய்: சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை வெஸிகடோரியா

அறிகுறிகள்

  • நோய் தாக்கிய இலைகளின் மீது சிறுசிறு நீர் கசிந்து போன்ற பகுதிகள் கோண வடிவமாகவோ அல்லது வட்ட வடிவமாகவோ தோன்றும்.
  • இப்புள்ளிகள் யாவும் நாளடைவில் கறுப்பாக மாறிவிடும்.
  • அதிகமாகப் புள்ளிகள் தோன்றினால் இலைகள் பழுத்து பெருமளவில் உதிர்ந்து விடுகின்றன.
  •  நோய் தீவிரமாகத் தோன்றும்பொழுது பழங்களின் மீதும் சிறுசிறு கறுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்து விடுகின்றன.

பரவுதல்

  • விதையிலும், மண்ணிலும் பேக்டடீரியா தங்கியிருக்கும் இயல்புடையவை.
  • நோய் கண்ட இலைகள், காய்கள் போன்ற பாகங்கள் விழுந்து கிடந்தால் அவற்றிலிருந்து அடுத்த பயிருக்கும் நோய் பரவுகின்றது.
  •  நோய் கண்ட இலைகளில் பேக்டீரியா 5 திங்கள் வரை அழியாமல் இருக்கின்றன.
  • விதையிலை, இலை, தண்டு முதலான பாகங்களில் பாக்டீரியா உட்செல்கின்றன.
  • இலைத்துளை வழியாகவும் காயங்களின் வழியாகவும் நுழைகின்றன.
  • காற்றுடன் மழை பெய்யும் போது மழைத்துளிகள் நோயுற்ற பாகங்களில் விழுந்து சிதறும் போது பேக்டீரியாவும் பரவுவதால் இதன் மூலம் பிற செடிகளுக்கு நோய் தொற்றுகின்றது.
  • இந்நோய் 240 செ. வெப்பநிலையில் மிகுதியாகத் தோன்றும்.
  • இரவில் வெப்பநிலை 24-280 செ. இருப்பின் (பகல் வெப்பநிலை எவ்வாறு இருப்பினும்) நோயினை மிகுதியாக்கும்.
  • தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மிகுதியாகப் போடப்பட்ட பயிரில் நோய் அதிகமாகத் தோன்றுவதில்லை.

கட்டுப்பாடு

  • நோயில்லாத பழங்களிலிருந்து சேகரித்தல் வேண்டும்.
  • விதைகள் திராம் அல்லது கேப்டான் மருந்து (4 கிராம்/கிலேர) கலந்து விதைக்க வேண்டும்.
  • நட்ட பயிரில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எக்டருக்க அக்ரிமைசின் (175 கிராம்/500 லிட்டர் நீர்) என்னும் எதிர் உயரிப் பொருளைத் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016