பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நச்சுயிரி நோய்கள்

இலை சுருட்டு நோய்

  • இலையின் நடுநரம்பில் சுருண்டு, உருமாற ஆரம்பிக்கும்
  • குட்டை வளர்ச்சி, சிறியளவு இடைக் கணுக்கள், இலைகள் மிகச் சிறியதாகும்
  • பூ மொட்டுகள் பெரிய அளவை அடையும் முன் நின்று விடும். மகரந்த தூள் இருக்காது
  • வெள்ளை ஈயின் மூலம் பரவும்
பல்வேறு நிலைகளில் வாடல் வைரஸ்
வைரஸ் தொற்று

கட்டுப்பாடு

  • இரசாயனக் கட்டுப்பாடு முறைகள் என்று எதவுமில்லை
  • ஆகவே, இயந்திர, உழவு முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது
  • தாக்கப்பட்ட செடிகளை வேருடன் களைந்து புதைக்க வேண்டும் (அ) எரிக்க வேண்டும்
  • ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடக் கூடாது
  • நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
  • தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்
  • விதைகளை டிரைசோடியம் ஆரிதிரிபாஸ்பேட் 150 கிராமில் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் நன்றாக நீரில் அலசி, காய வைத்து, விதைக்க வேண்டும்
  • நாற்றங்கால் படுக்கைகளின் மீது நைலான் வலை (அ) வைக்கோல் கொண்டு மூடவேண்டும்
  • 2-3 வரிசை மக்காச்சோளம் (அ) சோளத்தை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்
  • கார்போப்யூரான் 3  4-5 கிலோ/ஏக்கர்  என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்
  • இல்லையென்றால், டைமெத்தோயேட் 2 மிலி (அ) அசிப்பேட் 1 கிராம் /லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்
  • தாக்கப்பட்ட நச்சுயிரி செடிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016
s