பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாங்கொட்டைத் துளைப்பான்: டெர்னோகிட்டஸ் மேஞ்ஜிஃபெரே

தாக்குதலின் விபரம்:

  • புழுக்கள் பழங்களை துளைத்துக் கொண்டு உள்ளே சென்று சதைப்பகுதியை உண்ணுகிறது
  • நாளடைவில் விதைக்குள் சென்று விதைப்பருவத்தை தாக்குகிறது
  • சேதம் அதிகமடைந்த நிலையில் காய்கள் பழுப்பேரி மடிந்துவிடும் (அ) கீழே விழுந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • புழு - கால்கள் கிடையாது மஞ்சள் நிறமுடையது தலை கருமை நிறத்தில் இருக்கும்.
  • கூண்வண்டு - கருமை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அகற்றி விட வேண்டும்.
  • பூக்கள் மலராத பருவக்காலத்தில் பூச்சி மருந்தை நேரிடையாக மரங்களின் அடியில் தெளிக்கவும்.
  • ஆசிபேட் 75 SP 1.5 கிராம் /லிட்டர் அல்லது லாம்டா சைஹலோத்திரின் 5 EC 2.5 மி.லி./லிட்டர் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016