TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: காய்கறிப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் கிரேமினிகோலா

விருந்துயிரி: தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை, புடலைங்காய்

அறிகுறிகள்:

பாதிக்கப்பட்ட தாவரங்கள் பூசணியின் வேர்
பாதிக்கப்பட்ட வெண்டை நாற்றுகல் பாதிக்கப்பட்ட மிளகாய் நாற்றுகல்
  • வேர் முடிச்சுகள் - புடலைக்காயில் பெரிய முடிச்சுகளும், இதர காய்கரிகளில் உறுதியான பெரிய முடிச்சுகளும், மிளகாயில் சிறிய முடிச்சுகளும் காணப்படும்.
  • அதிகம் தாக்குண்ட நிலையில் செடிகளின் இலைகள் வெளிறியும் வளர்ச்சி குன்றியும் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட நாற்றுக்கள் வாடிக் காய்ந்து விடும்.
  • தப்பிப் பிழைக்கும் தாவரங்களில் பூக்கள் மற்றும் பழங்களின் உற்பத்தி வெகுவாக குறைகிறது.
  • மெலாய்டோகைன் நூற்புழு, கேரட் போன்ற பயிர்களின் வேர் மற்றும் கிழங்குகளில் தரம் மற்றும் விளைச்சளின் அளவை குறைத்து, அதன் சந்தை மதிப்பையும் குறைக்கிறது.

கட்டுப்பாடு:

  • நாற்றங்காலில், சூடோமோனாஸ் புளூரசன்ஸ் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் இடவும்.
  • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகளைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • அறுவடைக்கு பின் வேர் முடிச்சுகள் கொண்ட வேர்களை முழுவதுமாக அப்புறப்படுத்தவும்
  • கோடை காலத்தில் நிறமற்ற பாலிதீன் விரிப்புகளைப்  பரப்பி மண் வெப்பமூட்டல் மேற்கொள்ளலாம்
  • கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ இடவும்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016