பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் |
ஃபுசேரியம் வாடல் :
அறிகுறிகள்
- நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் தெளிவாகி இலைகளில் பசுமை சோகை ஏற்படுகிறது.
- இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் எல்லா இலைகளும் வாட ஆரம்பிக்கும்.
- இளம் இலைகளின் கிளை நரம்புகள் வெளியெ தெரிந்து இலைக்காம்பு உதிர ஆரம்பிக்கும். விளை நிலங்களில் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி இறந்துவிடும்.
- அறிகுறியின் தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். கடைசி நிலையில் வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறுகிறது. தாவர வளர்ச்சி குன்றி பின்பு இறந்துவிடும்.
 |
 |
|
 |
ஆரோக்கியமான தாவரம் |
பாதிக்கப்பட்ட |
|
தாவரங்கள் |
மேலாண்மை
- பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
- கார்பென்டிசம் (0.1%) கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும்.
- பயிர் சுழற்சி முறையில் சாராத் தாவரங்களை அதாவது தானியங்களைப் பயிரிட வேண்டும்.
|
|