பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள

வெள்ளை ஈ: பெமீசியா டபாசி 

தாக்குதலின் அறிகுறிகள்:

  • வெளிப்பச்சை புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்
  • இலைகள் மஞ்சளாக மாறும்
  • இலைகள் அடிப்புறத்தில் சுருண்டு பிறகு காய்ந்து விழுந்துவிடும்
  • இப்பூச்சிகளின் தாக்கத்தினால் தக்காளி இலைச்சுருள் என்னும் வைரஸ் நோய் பரவுகின்றது


பழங்களில் சேதம்      வெண்ணிறத்திட்டுகள் இலை சுருளுல்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்
  • இளம்குஞ்சுகள்: முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்
  • முதிர்பூச்சிகள்: சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்
  • கட்டுப்படுத்தும் முறை: 

    • இலைச்சுருள் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்
    • தேவையான அளவு தழைச்சத்து மற்றும் நீர்பாசனம் மேற்கொள்ள வேண்டும்
    • மாற்று உணவுப்பயிரான துத்தி செடியை நீக்க வேண்டும்
    • மஞ்சள் நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை நட்டு ஹெக்டேருக்கு 12 வைத்து கவரப்படும் பூச்சிகளை அழிக்கலாம். டப்பாக்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து புதிய எண்ணெய் தடவி வைக்கவேண்டும்.
    • கார்போபியுரான் 3% G @40 கி.கி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்
    • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்
இளம்குஞ்சுகள் மற்றும முதிர்பூச்சிகள் முட்டை மற்றும் முதிர்பூச்சிகள்

 

பூச்சிகொல்லி அளவு
டைமெத்தொயேட் 30 % EC 1.0 மி/ லி 
மாலத்தியான் 50 % EC 1.5 மி/ லி
ஆக்சிடெமட்டான் / மீத்தையில் 25 % EC 1.0 மி/ லி
தையோமீத்தாக்சம் 4.0 மி/ 10 லி 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016