தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

கோ 3

கோ – சிஐபி 1

ஐ ஜி எஸ் பி - 14

முன்னுரை
இரகங்கள் : கோ 1, கோ 2, கோ 3 மற்றும் கோ – சிஐபி 1.

மற்ற இரகங்கள்

வி 6 : இது ஒரு சீன இரகக்கிழங்கு
வி 8 : அமெரிக்க இரகக் கிழங்கு
வி 12 : சீனவகைக் கிழங்கு, ‚நிதி, ‚வர்தன், கிரன், ‚பாத்ரா, ‚ரெத்னா
எச் 1 : திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகைகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இனச்சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்ட இரகம்.
தமிழ்நாட்டில் பயிர் செய்யப்படும் சில் சர்கக்கரைவள்ளி இரகங்கள்
எஸ்பி உள்ளூர், முசிறி தண்டல், எஸ்பி 4, எஸ்பி 13, எஸ்பி 18.
மண் மற்றும் தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள எத்தகைய மணல் கலந்து நிலங்களிலும் நன்கு வளரும். களிமண் பூமி ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 5.6 முதல் 6.7 வரை இருக்கவேண்டும். இதற்கு நீண்ட வெப்பமான பருவநிலைவேண்டும். வறட்சியை மிகவும் தாங்கக்கூடிய சாகுபடி செய்யலாம். அதிகமாக சூரிய வெளிச்சமும், மிதமான மழையும், வெப்பமான இரவும் பகலும் உள்ள இடங்களில் நன்கு வளரும்.
பருவம் : நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில்  ஜூன் - ஜூலை மாதங்களிலும், மற்ற இடங்களில் செப்டம்பர் கடைசி வாரத்திலோ, அக்டோபர் முதல் வாரத்திலோ நடவு செய்யவேண்டும்.

விதையும் விதைப்பும்

நடுவதற்குத் தேவைப்படும் கொடிகள்: மேலை நாடுகளில் இதைக் கிழங்குகளிலிருந்து விதைப் பயிராகப் பயிரிடுகிறார்கள். இந்தியாவில் நுனிக்கொடிகள் மூலம் பயிரிடப்படுகிறது. நடவு செய்ய நுனிக் கொடிகளைத் தேர்ந்தெடுத்து அதை 20 செ.மீ நீளத்திற்குத் துண்டுகளாக்கி நடவு செய்ய உபயோகப்படுத்தவேண்டும். கொடியின் மத்தியிலுள்ள பாகத்தையும் உபயோகிக்கலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 80,000 தண்டுகள் தேவைப்படும்.
நடும் முறை: நிலத்தை இரண்டு அல்லது மூன்று மறை நன்றாக உழுது பண்படுத்திய பிறகு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். நடுவதற்கு முன்னர் தண்ணீர் கட்டி நுனிக்கொடித் துண்டுகளை 20 செ.மீ நீளத்திற்குத் தயார் செய்து பார்கிளன் பக்கவாட்டில் 15 முதல் 30 செ.மீ இடைவெளியில் வரிசையாக நடவேண்டும். மத்தியில் உள்ள கொடித் துண்டுகளை உபயோகித்தால் நுனி, அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.

நிர் நிர்வாகம்

நடுவதற்கு முன், எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்தை செடித்துண்டுகளை நடுத் பக்கமாகப் போட்டு தண்ணீர் கட்டி நடவேண்டும். முப்பது நாட்கள் கழித்து மறுபடியும் அதே அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட்டு மண் அணைக்கவேண்டும். எக்டருக்கு 20 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை அளித்தால் பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து இடலாம்.


பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

சர்க்கரை
வள்ளிக்கிழங்கு

கொடிகளை நடுவதற்கு முன்

20

40

60

154

10

34

 

முப்பது நாட்கள் கழித்து

20

40

60

154

10

34

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

பின்செய்நேர்த்தி : களைகளை மாதத்திற்கு ஒரு முறையாக இரண்டு மூன்று தடவைகள் எடுக்கவேண்டும். செடிகள் நட்ட 60 நாட்கள் கழித்து கணுக்களை வேர்கள் விடிக்கமலிருக்கக் கொடிகளை அடிக்கடி தூக்கிப் புரட்டிப் போட்டு நல்ல வேர்க்கிழங்குகள் உண்டாகும்படி செய்யவேண்டும். கிழங்குகள் நல்ல முறையில் உருவாக நட்ட 15 நாட்கள் கழித்து எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 15 நாட்கள் இடைவெளியில் ஐந்து முறை தெளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

கூன்வண்டு : இப்பயிரில் கூன்வண்டின் தாக்குதல் அவசியம். இதைக்கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
பூச்சி தாக்காத கிழங்குகளை உபயோகப்படுத்தவேண்டும்.
மஞ்சள் ஒட்டும் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
ஒரு எக்டருக்கு பென்தியான் 625 மில்லி அல்லது கார்பரில் 50 சதவீதம் 1.25 கிலோ 21 நாட்களுக்கு ஒரு முறையாக, கிழங்குகள் எடுக்க ஆரம்பித்ததலிருந்த தெளிக்கவேண்டும்.

அழுகல் நோய் : இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிராம் கார்பென்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைந்து ஊற்றவேண்டும்.

அறுவடை

பொதுவாக 100லிருந்து 130 நாட்களில் கிழங்குகளை அறுவைட செய்யலாம். அறவடைக்குத் தயாராக உள்ள கொடிகளின் அடிப்பாகம் கலந்த பழுப்பு நிறமாக மாறம் கொடிகளின் அடிப்பாகத்தில் நிலத்தில் விரிசல் ஏற்படும். சில கொடிகளை அகற்றி விட்டுக் கிழங்குகள் நன்கு முற்றிவிட்டனவா என்று பார்த்துப் பின்னர் அறுவடை செய்யவேண்டும். கிழங்கை வெட்டிப்பார்த்தால் பால் போன்ற திரவம் வரும். அது விரைவில் முதிர்ச்சிக்கு அறிகுறியாகும். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சினால் கிழங்குகளை சேதப்படாமல் அறுவடை செய்யலாம்.

மகசூல் : 110-130 நாட்களில் எக்டருக்கு 25-30 டன் கிழங்குகள்.

Updated on : Jan 2016