Agriculture Engineering
| | | | | | | | | |
அரவை மற்றும் பிரித்தெடுக்கும் இயந்திரம்

மிளகாய் விதை பிரிக்கும் இயந்திரம்

பயன்

:

உலர்ந்த மிளகாயிலிருந்து விதையை பிரித்து எடுக்க பயன்படுகின்றது.

திறன்

:

நாள் ஒன்றுக்கு 4 குவிண்டால்கள்

விலை

:

ரூ. 12000/-

அமைப்பு

:

இவ்வியந்திரம் உள்செலுத்துவான், பிரித்தெடுக்கும் பகுதி, மோட்டாருடன் இணைக்கப்பட்ட சுழலும் அடிப்பான் அமைப்பு போன்ற பாகங்களைக் கொண்டது. உலர்ந்த மிளகாயானது அடிப்பானின் உதவியால் சிறு துண்டுகளாக்கப்படுகின்றது. இதனால் விதை வெளியேற்றப்படுகிறது. மிளகாய் விதையும் தோலும் வெளிவாயை அடைகிறது. மேலும் அவைகளை தனித்தனியே  பிரிக்கவேண்டும். விதை நீக்கம் செய்யப்பட்ட, மிளகாய் தோலை அரைத்து, சமையலில் பயன்படுத்தலாம்.

சிறப்பு அம்சங்கள்

:

தொடர்ந்து இடைவெளி இன்றி வேலை செய்யக்கூடியது.
இக்கருவியில் வேலை செய்யும் போது அதிக அளவில் காரம் வருவதில்லை.
விதை பிரித்தெடுத்த பின்பு மிளகாய், மிளகாய்த்தூள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது.