Horticulture
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: மரவள்ளிக்கிழங்கு

SAGOSERVE

மரவள்ளிக்கிழங்கு

மண் மற்றும் தட்பவெப்பநிலை : மண்ணும் மணலும் கலந்த பூமி சிறந்தது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும். களிமண், வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 - 6.5 இருத்தல்வேண்டும்.

மரவள்ளி தாவரம் மரவள்ளி பயிரிடுதல் மரவள்ளி கிழங்கு அறுவடை மரவள்ளி கிழங்கு மதிப்புக் கூட்டு மரவள்ளி பொருட்கள்


இரகங்கள் : பெருவள்ளிக்கிழங்கு : கோ 1, ‚ரூபா, ‚கீர்த்தி மற்றும் ‚சில்பா, ‚லதா மற்றும் ‚கலா.
கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்திலும், உள்சதை வெள்ளை, மஞ்சள், சிகப்பு மற்றும் ஊதா போன்ற நிறங்களில் இருக்கும்.

CO 1 Co 2 Co 3
CO (TP) 4 YTP1  
பருவம் : மே - ஜூன்

விதையும் விதைப்பும்

நடும் கிழங்குகள் : நல்ல முற்றின கிழங்குகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும். துண்டுகளாக்கிய கிழங்குகளையும் நடுவதற்கு உபயோகப்படுத்தலாம். எக்டருக்கு 1875-2500 கிலோ கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கக் செய்யவேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார்கக் பிடிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
கிழங்குகளை நடுவதற்கு முன்பு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து 60 கிலோ மணிச்சத்து, 120 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும். பிறகு பார்களின் பக்கவாட்டில் கிழங்குகளை நடவேண்டும்.

பயிர்   ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்கு)
    தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா பொட்டாஷ்
வள்ளிக்
கிழங்கு
நடுவதற்கு முன்பு 40 60 120 231 37 100
  நட்ட 90 நாட்கள் கழித்து 50 0 120 0 109 201

ஒரு எக்டருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த 30வது நாளில் இடவேண்டும்.

உரப்பாசனம்
மரவள்ளி ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 90:90:240 கிகி. இந்த அளவை பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் மூலம் தினமும் ஒரு மணிநேரம் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
உரப்பாசன அட்டவணை : மரவள்ளி (இரகம்)

பருவம் பயிர் பருவம் ஆயுட் காலம் உர அளவு மொத்த உரம் அளிக்கப்படும் ஊட்டச்சத்து தேவையான %
தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
1 நடவு செய்தல் முதல் நாற்று பருவம் 20 19:19:19 23.57
34.67
7.87
4.48
4.50
-
4.48
-
-
4.48
15.60
3.93
10.00 5.00 10.00
உபரி மொத்தம் 8.98 4.48 24.01      
2 வளரும் பருவம் 70 12-61-0
13-0-45
யூரியா
11.40
105.33
26.80
1.34
13.69
12.33
6.80
-
-
-
72.00
-
30.00 7.5 30.00
உபரி மொத்தம் 27.36 6.80 72.00      
3 கிழங்கு தோன்றும் பருவம் 90 19:19:19
0.0.50
யூரியா
11.40
144.00
55.73
1.34
-
25.64
6.80
-
-
-
72.00
-
30.00 7.5 30.00
உபரி மொத்தம் 26.96 6.80 72.00      
4. கிழங்கு வளரும் பருவம் 35 19:19:19
13-0-45
யூரியா
23.57
182.67
48.87
4.48
-
22.48
4.48
-
-
4.48
92.34
-
30.00 5.00 40.00
உபரி மொத்தம் 26.96 4.48 96.82      
  மொத்தம் 90.28 (அ) 90 22.56 (அ) 22.50 240.22
(அ) 240
100 25 100

75% மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக  அளிக்கவும் = 421.88கிகி/ எக்டர்.

19:19:19 = 47 கிகி/எக்டர் 13:0:45=140கிகி/எக்டர் 12:61:0 = 23 கிகி/எக்டர்
0:0:50 = 335கிகி/எக்டர் யூரியா = 132 கிகி /எக்டர் குளோரசிஸ் : நடவு செய்த 60 மற்றும் 90 நாட்களில் 1% இரும்பு சல்பேட் + 0.5% துத்தநாக சல்பேடை இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும்.


நீர் நிர்வாகம்
தேவைக்கு ஏற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
மேலுரமிடுதல் : நட்ட 30 நாட்கள் கழித்து எக்டருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்துடன் 40 கிலோ மணல் கலந்து இடவேண்டும். நட்ட 90 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை மேலுரமாக இடவேண்டும்.
பின்செய்நேர்த்தி : நட்ட ஒரு மாதத்தில் கிழங்குகள் முளைக்க ஆரம்பிக்கும். கொடிகள் வளரும். கொடிகளை மூங்கில் தட்டிகளில் படரவேண்டும் இரண்டு மாதத்தில் களை எடுத்து மண் அணைக்கவேண்டும்.

அறுவடை
இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும்.

மகசூல் : 240 நாட்களில் எக்டருக்கு 20-25 டன் கிழங்குகள்.

Last Update : Jan 2016