|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | வேளாண்மை ::          
        சோளம்  |  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மண்வளம் | தாவர ஊட்டச்சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மானாவாரி  சோளம் பருவம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை ஒட்டி  விதைப்பு செய்யலாம். சராசரி மழையளவு மி.மீட்டர் உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை. நிலம் தயாரித்தல் கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப்  பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர்  ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம்  தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள்  கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது  மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல்  குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி,  சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு  போன்ற  முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். விதையும் விதைப்பும் விதை அளவு : எக்டருக்கு 15 கிலோ விதைநேர்த்தி விதைகளைக் கடினப்படுத்துதல் வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக்  கடினப்படுத்தி பின்பு விதைக்கவேண்டும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20  கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில்  தன் எடைக்கு உலர்த்திய பின் விதைப்பதினால் பயிர் வறட்சி தாங்கி வளரும். 
 சோளப் பயிருடன் இணை வரிசையில் பயறு வகைகளைப்  பயிர் செய்தால் உபயரி வருமானம் கிடைப்பதோடு மண்வளத்தையும் கூட்டமுடியும். ஒருங்கியைந்த  ஊட்டச்சத்து மேலாண்மை உர நிர்வாகம்: ஒர எக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய  தென்னை நார்க்கழிவு இடவேண்டும். இராசயன உரங்களை மண்பரிசோதனை சிபாரிசிபடி  இடவேண்டும். அல்லது பொதுப்பரிந்துரைப்படி  எக்டருக்கு 40 20 0 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். களைக்  கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி களை நிர்வாகம் : சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம்  வாரம் முதைல் 5ம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில்  போதுமான ஈரம் இருக்கும்போது எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி  மருந்தினை விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து  கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன்  ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு 2 லிட்டர் பெண்டிமிதிலின்  தெளிக்கவேண்டும். மறுதாம்பு சோளம் மறுதாம்புப் பயிர் சாகுபடியில் கவனத்தில் இருக்கவேண்டியவை. 
 
 குறிப்பு : மருதாம்புப் பயிரின் வயது நடவு பயிரை  விட 15 நாட்கள் குறைவாக இருக்கும். பயிர்  மேலாண்மை கம்பு மானாவாரியிலும் இறவையிலும் செம்மண்,  குறுமண், இருமண் நிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. 1. நாற்றாங்கால் நிலம்  தயாரித்தல் ஒரு எக்டர் நடவு செய்ய 7.5 சென்ட் நாற்றாங்கால்  தேவைப்படும். நாற்றாங்கால் நிலத்தை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் நிலத்தை தயார்  செய்யவேண்டும். நாற்றாங்கால்  விதைப்பு மேட்டுப்பாத்திகளில் 3.75 கிலோ விதையை 7.5  சென்ட் நாற்றாங்காலில் அதிக ஆழமில்லாமல் விதைக்கவேண்டும். குருத்து ஈ அதிக  பாதிப்புள்ள பகுதிகளில் 12.5 கிலோ விதையை விதைத்து ஆரோக்கியமான நாற்றுக்களை  தேர்வு செய்து நடவேண்டும். விதைத்த பிறகு 500 கிலோ தொழு உரம் விதைகளை  மூடவேண்டும். நீர்  நிர்வாகம் விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,7,12,17ம் நாள்  நீர் கட்ட வேண்டுதல் அவசியம். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும்  விதைத்த 3,9,16 ஆம் நாள் நீர் பாய்ச்சினால் போதுமானதாகும். பார்,  பாத்தி அமைத்தல் 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். அல்லது நீர் அளவை பொறுத்து 10 அல்லது 30 சதுர மீட்டர் பாத்திகள் அமைக்கவேண்டும். 
 உரமும் உரமிடுதலும் 
   15 முதல் 18 நாட்கள் வயதுள்ள நாற்றுக்களை  குத்துக்கு ஒரு நாற்று வீதம், 45 செ.மீ ஒ 15 செ.மீ என்ற இடைவெளியில் நடவு  செய்யவேண்டும். 5 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (1000 கிராம். எக்டர்) மற்றும் 5  பொட்டலம் பாஸ்போபாக்டீரியா (1000 கிராம்.எக்டர்) அல்லது 10 பொட்டலம் அசோபாஸ்  (2000 கிராம்.எக்டர்) 40 லிட்டர் தண்ணீருடன் அரிசிக் கஞ்சியும் கலந்து அதில்  நாற்றுக்களின் வேர்ப்பாகத்தினை 15-30 நிமிடங்கள் நனைத்து பிறகு நடவேண்டும். களை  நிர்வாகம் விதைத்த நடவு   செய்த 3ஆம் நாளில் அட்ரசின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 500 கிராம் என்ற  அளவில் 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கவும். பிறகு 30-35வது  நாளில் கை களையெடுக்கவேண்டும். களைக்கொல்லி உபயோகிக்கவிட்டால் விதைத்த, நடவு  செய்த 15வது மற்றும் 30-35 நாட்களில் கைக்களை எடுக்கவேண்டும். நீர் நிர்வாகம் 
 மண்குறிப்பு : பருவகால தட்பவெப்பநிலையைப்  பொறுத்து நீர் நிர்வாகம் மாறும். பயிர்  அறுவடை அறுவடைக்கான அறிகுறிகள் 
 அறுவடை 
 தானியங்களை கதிரில் இருந்து பிரித்தல் மற்றும் தரம் பிரித்தல் 
 
 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மானாவாரி நில சாகுபடி முறை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேளாண்மைத் துறை திட்டம்  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பயிர்த் திட்டமிடுதல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| | முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | உரமேலாணமை | நீர் நிர்வாகம் | களை மேலாண்மை | பூச்சி & நோய் மேலாண்மை | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து 
 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||