|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|   | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | வேளாண்மை :: எள் |  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
 பருவம் மற்றும் இரகங்கள் அ. மானாவாரி 
 
 எள் இரகங்கள் 
 
 
 நிலம் தயாரித்தல் மணற்பாங்கான  வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர்  கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால்  உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து  நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக்  கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இரு, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5  டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள்  சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர  மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர்  தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும்  நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு  உழவினால் மூடவேண்டும். விதையும் விதைப்பும் விதை  அளவு எக்டருக்கு 5 கிலோ. விதைநேர்த்தி இரண்டு  கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணி  நேரம் கழித்து விதைக்கவேண்டும். இதைப் பூஞ்சாண கொல்லியுடன் கலக்கக்கூடாது. 25 சத  தழைச்சத்தானது 3 பாக் அசோஸ்பைரில்லம் (600 கிராம் . எக்டர்) மற்றும் 3 பாக் (600  கிராம்.எக்டர்) பாஸ்போபாக்டீரியம் அல்லது 6 பாக் அசோபாஸ் (1200 கிராம், எக்டர்)  மூலம் விதை நேர்த்தி செய்யும் போது 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்.எக்டர்)  மற்றும் 10 பாக் (2000 கிராம் .எக்டர்) பாஸ்போபாக்டீரியா அல்லது 20 பாக் அசோபாஸ்  (400 கிராம்.எக்டர்) மண்ணில் இடுவதன் மூலம் சரி செய்யப்படுகின்றது. விதைக்கும் முறை ஐந்து  கிலோ விதையுடன் 20 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத்தூவவேண்டும். இடைவெளி விதைத்த  15 ஆம் நாள் செடிக்குச்செடி 15 செ.மீ இடைவெளிவிட்டு செடிகளை கலைத்துவிட வேண்டும்.  பின்பு 30ம் நாள் செடிக்கு செடி 1 அடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைத்து  விடுவது சிறந்தது. உரமும் உரமிடுதலும் தொழு உரம் 
 களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி விதைத்த  15 நாட்கள் கழித்து கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும்  எடுத்துக் களைகளைக் கட்டுப்படுத்தவேண்டும். நீர் நிர்வாகம் எள்ளிற்கு  மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவ்றறைப் பொருத்து சுமார் 5 அல்லது 6 முறை  நீர்ப்பாய்ச்சவேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7வது நாள் உயிர்த் தண்ணீர்,  25வது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும்,  முதிர்ச்சியடையும் போதும் 2 முறையாக சுமார் 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். பூ  பூக்கும் பருவம் காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதைக் கவனமாகக்  கடைப்பிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாட்களுக்குப்பின்  நீர்ப்பாய்ச்சக்கூடாது. அறுவடைக்கான அறிகுறிகள் 
 மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்பொழுது அறுவடை செய்துவிடவேண்டும். தவறினால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் மிகவும் குறையும். | தாவர ஊட்டச்சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வறட்சி  வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| © All Rights Reserved. TNAU-2008. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||