|| | | |||
 

வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

தோட்டக்கலை

வாழை மரத்துக்கும் அரைக்கீரைக்கும் கல்யாணம்

விடிவெள்ளி காக்கரட்டான் - பூ கொடுத்த புது வாழ்வு

புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்.. வெட்டிவேர்.. வெற்றிவேர்!

பாடு இல்லாமல் பணம் தரும் பாரம்பர்ய எலுமிச்சை


வாழை மரத்துக்கும் அரைக்கீரைக்கும் கல்யாணம்

 

சென்னைப் போன்ற நகர்ப்புறங்களில் கீரைகளுக்கு இருக்கும் மரியாதையே தனி. இதையே தனது மூலதனமாக்கிக் கொண்டு, அரைக்கீரைச் சாகுபடியில் அசத்தி வருகிறார் கமலக்கண்ணன்.
சென்னையும் காஞ்சிபுரம் மாவட்டமும் உரசிக்கொண்டிருக்கும் மேற்குப் பகுதியில் மெளலிவாக்கம் கிராமத்தின் அருகே இருக்கும் பரணிப்புத்தூர் கிராமத்தில் தான் கமலக்கண்ணனின் (98406-87371) அரைக்கீரை சாகுபடி றெக்கை கட்டிப் பறக்கிறது.
பதினைஞ்சி வயசிலிருந்தே விவசாயம் தான் பொழப்புன்னு ஆகிப்போச்சி. இந்த ஒண்ணரை ஏக்கர் தோட்டத்துலு இருபது வருஷமா விவசாயம் பண்றேன். இது குத்தகை நிலம்தான். இந்த ஏரியாவுல இன்னி தேதிக்கு ஒரு ஏக்கர் நெலம் கோடி ரூபாயைத் தாண்டி போயிக்கிட்டிருக்கு. சுத்தி விவசாயம் பார்க்கறவங்க குறைய ஆரம்பிச்சிட்டாங்க. இந்தச் சூழ்நிலையிலயும் ஒரு மகராசன் இந்த நிலத்தைக் குறைஞ்ச தொகைக்கு எனக்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கார்.

அவரோட புண்ணயத்தால கடனாளி ஆகாம, என் பொழைப்பு சந்தோஷமா ஓடுது. ஏற்கெனவே வாழைத் தோட்டத்துக்கு நடுவுல கத்தரி, வெண்டி இதெல்லாம் போட்டிந்தேன். இப்ப ரெண்டு வருஷமா வாழைக்கு நடுவுல அரைக்கீரையையும் கோட ஆரம்பிச்சிட்டேன்.

கீரையை மட்டும் தனியா போடலாம் தான். ஆனா, கீரையில திடீர்ன்னு பூச்சி, புழு தாக்குதல் இருந்தா.. முதலுக்கே மோசமாயிரும். அதனால தான் நான் ஊடுபயிரா பண்றேன். இதுல கீரை மோசம் போனாலும் வாழை கைக்கொடுத்து தூக்கிவிட்டுடும் என்று சொன்னவர் தன்னுடைய சாகுபடி தொழில்நுட்பங்களை விவரித்தார்.
நிலத்தைத் தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும் (கமலக்கண்ணன் 25 சென்ட் நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்) டிராக்டர் கொண்டு 2 சால் உழவு ஓட்டவேண்டும். ஒன்றே கால் சென்ட்டுக்கு ஒரு பாத்தி என்று அமைத்தால், மொத்தம் 20 பாத்திகள் வரும். ஆறு அடிக்கு ஒரு கன்று வீதம் 250 வாழைக் கன்றுகள் நடமுடியும். ஒரு அடிக்கு ஒரு அடி ஆழம் மற்றும் அகலமுள்ள குழிப் பறித்து, தொழுவுரம் போட்டு வாழைக்கன்றுகளை நடவு செய்து, உயிர்த் தண்ணீர் விடவேண்டும், மூன்று நாள் கழித்து, அரைக்கீரை விதைப்பதற்கான வேலைகளைத் தொடங்கவேண்டும். பாத்திகளில் காலியாக உள்ள இடத்தில் ஒரு டன் தொழுவுரத்தை தூவிவிடவேண்டும் அதன் மீது, கீரை விதைகளை தூவிவிடவேண்டும் (25 சென்ட் நிலத்துக்கு நான்கு கிலோ கீரை விதைகள் தேவைப்படும். மற்ற விவசாயிகளிடமோ... அல்லது தனியார் கடைகளிலோ விதைகளை வாங்கலாம்). உடனே பாத்திகளில் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் கீரை முளைத்து விடும். அதன் பிறகு வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் போதும். விதைத்த ஒரு மாதம் கழித்து முதலாவது அறுவடை, அடுத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை அறுவடை செய்யலாம். தைப்பட்டத்தில் விதைத்தால் புரட்டாசி வரை எட்டு மாதங்களுக்கு தொடர்ந்து மகசூல் பார்க்கலாம்.

முதல் அறுவடை முடிந்த பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை யூரியா 10 கிலோ, டிஏபி 10 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை கீரைப்பாத்திகளில் போடவேண்டும். கீரை நன்கு அடர்த்தியாக வளரும். (இயற்கை உரம் போட்டாலும் கூட போதும் என்று கமலக்கண்ணனிடம் சிலர் யோசனை சொல்கிறார்களாம். இன்னமும் அதை இவர் முயற்சிக்கவில்லை அடுத்த தடவை முயற்சித்துப் பார்க்கப் போகிறாராம்) பூச்சித் தாக்குதல் இருந்தால் மாதம் ஒரு முறை பவர்-ஸ்பிரேயர் மூலம் எண்ணெய் மருந்து (இதுவும் பூச்சிக்கொல்லிதான்) அடிக்கலாம்.

பூச்சிக்கொல்லி அடிக்கத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இயற்கையான முறையிலும் புழு, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு பாத்திக்கும் நடுவில் புளிச்சக்கீரையை விதைக்கலாம். அதே போல வரப்பு ஓரத்தில் அகத்திக் கீரையை நடவு செய்யலாம். அரைக்கீரையைத் தாக்க வரும் பூச்சிகளும், புழுக்களும் புளிச்சக்கீரை மற்றும் அகத்திக்கீரை பக்கம் திரும்பிவிடும். குறிப்பாக படைப்புழுத்தாக்குதல் குறைந்து விடும். அதே சமயம், புளிச்சக்கீரை மற்றும் அகத்திக்கீரை மூலமாகவும் தனியாக ஒரு வருமானத்தைப் பார்க்க முடியும்.
25 சென்ட் நிலத்தில் ஒரு அறுவடைக்கு 1,250 கட்டுகள் வீதம் கீரை கிடைக்கும். உள்ளூர் வியாபாரிகள் நேரடியாக வயலுக்கு வந்து கட்டு இரண்டு ரூபாய் என்று வாங்கிச் செல்கிறார்கள். வெளியில் 5 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
அரைக்கீரை விதைத்து ஒன்பது மாதங்கள் ஆனதும், முழுமையாக கீரையை அகற்றி, தோட்டத்தை சுத்தம் செய்துவிடவேண்டும்.

வாழையைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு இரண்டு தடவை உரம் வைத்து பராமரிக்கவேண்டும். தை மாதம் நடவு செய்தபோது தொழு உரம் மட்டும் வைக்கவேண்டும். மீண்டும் ஆடி மாதத்தில் ஒரு டன் தொழுவுரத்தை வாழைக்கு வைக்கவேண்டும். கூடவே, டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் இவற்றை தலா 10 கிலோ வீதம் வாங்கி, ஒன்றாகக் கலந்து கன்றுகளுக்கு வைக்கவேண்டும். அடுத்தது, கீரைச் சாகுபடி முடிந்து, அவை முற்றாக அழிக்கப்பட்ட பிறகு, கையோடு ஒவ்வொரு வாழைக்கும் மண் அணைத்து, யூரியா, டிஏபி தலா 10 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை கலந்து ஒவ்வொரு வாழைக்கும் கொஞ்சம் கொஞ்சம் வைத்துவிட வேண்டும். வாழைக்கு பராமரிப்புச் செலவு குறைவு தான். கீரைக்கு கொடுக்கும் ஊட்டத்திலேயே அதுவும் வளர்ந்துவிடும்.

வாழை  மரம் நன்றாக வளர்ந்து, 10வது மாதம் பூத்துவிடும். (கமலக்கண்ணன், வாழைத் தார்களாக விற்பதில்லை. இலை, முழு மரம் என்றே விற்பனை செய்கிறார்) கல்யாணம், திருவிழா சமயங்கள் என்றால், பூவுடன் கூடிய ஒரு ஜோடி மரம் 200 ரூபாய்க்கும் போகும். காயுடன் இருந்தால் 400 ரூபாய்க்கும் விலை போகும். மக்களின் தேவையைப்பொறுத்து இந்த விலை இன்னும் கூடும். இலையிலும் தனியான லாபம் தான். பெரிய இலைகளாக கொண்ட ஒரு கட்டு (100 இலைகள்) 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை போகும். எப்படிப் பார்த்தாலும் ஒரு மரத்திலிருந்து 300 ரூபாய் வீதம் கிடைக்கும்.

      25 செண்ட் நிலத்தில் அரைக்கீரை சாகுபடி செலவு - வரவு

      தோட்டத்தில் பெரும்பாலும் உழைப்பது சொந்த ஆட்கள் என்றாலும் அதுவும் கணக்கில் சேர்

விவரம்

செலவு

வரவு

4 கிலோ விதை

1,000

 

உரச்செலவு

2,250

 

மருந்துச் செலவு

1,350

 

மருந்தடிக்கும் கூலி

1,440

 

அறுவடைக்கூலி

7,200

 

மகசூல்
அறுவடைக்கு 1,250 கட்டுகள்.
மொத்தம் 17 அறுவடை ரூ. 2 x 21,250 கட்டுகள்

 

42,500

மொத்தம்

13,240

42,500

நிகர லாபம்

 

29,260

வாழைக்கான செலவு - வரவு

250 கன்றுகள் ரூ. 5 x 250

1,250

 

இரண்டு சால் உழவு

375

 

குழி பறிப்புக் கூலி

500

 

தொழுவுரம்

700

 

நடவின் போது உரம்

700

 

ஆடி மாதத்தில் உரம்

700

 

மண் அணைக்கும் செலவு

300

 

ஒரு மரத்திலிருந்து வருமானம் 300 x 250

 

75,000

மொத்தம்

4,525

70,475

வாழையில் நிகர லாபம்

 

70,475

கீரையில் நிகர லாபம்

 

29,260

நிகர லாபம்

 

99,735

க்கப்பட்டுள்ளது. வாழையை, வியாபாரிகளே ஆள் வைத்து வெட்டிச் சென்று விடுவதால், அறுவடைக்கூலி கணக்கில் சேர்க்கப்படவில்லை.


விடிவெள்ளி காக்கரட்டான் - பூ கொடுத்த புது வாழ்வு


மணக்கும் மல்லிகை விலையில் உச்சக்கட்ட உயரத்துக்கு எகிறிவிடும் நிலையில் அதை எட்டிப் பிடிப்பது என்பது பல சமயங்களில் குதிரைக் கொம்பு என்றாகிவிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மல்லிகைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பூ காக்கரட்டான் இதற்கு மெட்ராஸ் மல்லி என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இது கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. வடிவத்திலும் நிறத்திலும் மல்லிகைப் பூவைப்போலவே இருக்கும். இந்தப் பூக்கள் மல்லிகைக்கு இணையாக அழகுக்காகவும் மாலைக்கட்டவும் பூஜைக்கும் பெரிதும் பயன்படுகின்றன.

திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டி கோம்பைப் பகுதியில் முத்து (அலைபேசி : 99766 21550 பிபி) காக்கரட்டான் விவசாயியாக வடிவெடுத்த கதையை சொன்னார்.

ஆரம்பத்துல விவசாயக் கூலியாத்தான் இருந்தேன். சம்பாதிச்ச காசைக் கொஞ்சங் கொஞ்சமா சேத்து வெச்சி, கோம்பை அடிவாரத்துல அஞ்சி ஏக்கர் பூமி வாங்கினேன். கல்லும், காடுமா இருந்த நிலத்தை, கொஞ்சங்கொஞ்சமா சரிசெய்து ஒழுங்கு பண்ணிட்டு விவசாயத்தை ஆரம்பிச்சேன். பலவிதமான வெள்ளாமை செஞ்சேன். பக்கத்து ஊரு விவசாயி ஒருத்தர் காக்கரட்டான் பூவைப்பத்தி சொன்னார். உடனே, பத்து சென்ட் நிலத்துல அதை நட்டேன். நாலாவது மாசம் பூ வந்திச்சி. மொத அறுவடையில் அஞ்சி கிலோ பூ கிடைச்சிது. எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்கு போனேன். அன்னிக்குப் பார்த்து கிலோ 150 ரூபாய்ன்னு பூ வித்திச்சு. அஞ்சி கிலோவுக்கு 750 ரூபாய் கிடைச்சிது. அப்பவே, இனி நமக்கேத்த வெள்ளாமை, காக்கரட்டான் பூதான்னு முடிவு செஞ்சேன். இப்ப ரெண்டுள ஏக்கருல பூச்செடிக இருக்கு.
தான் மலர் விவசாயியாக மாறிய கதையைச் சொல்லி முடித்த முத்து, சாகுபடி முறைகளையும் சொன்னார்.
சுக்கான் மண் பாங்கான நிலத்தில் காக்கரட்டான் பூச்செடிகள் வளராது. மற்ற எல்லா வகை மண்ணிலும் நடலாம். நடவு செய்ய இருக்கும் நிலத்தில்  முதலில் வண்டல் மண் தூவவேண்டும். இது கிடைக்கவில்லை என்றால், குப்பை எரு போட்டு நன்றாக உழவு ஓட்டவேண்டும். ஆறு அடிக்கு ஆறு அடி இடைவெளிவிட்டு பதிய்ன செடிகளை நடவேண்டும். (ஏற்கெனவே காக்கரட்டான் சாகுபடி செடிகளை வாங்கிக் கொள்ளலாம். ஒரு பதியன், ஒரு ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்) இப்படி இடைவெளி கொடுத்து நடவு செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 1,210 செடிகள் வைக்கலாம்.

ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் நடவு செய்வது நல்லது. இந்தச் சமயத்தில் நடவு  போட்டால், அடுத்த மூன்றாவது மாதமே மகசூல் கிடைக்கும். அது தை மாதம் என்பதால் பூக்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனால், நல்ல விலை கிடைக்கும். வேறு மாதங்களில் நடவு போட்டால், இவ்வளவு விரைவாக செடிகள் மகசூல் தராது. செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும் மகசூலுக்கு பூப்பறிக்கிறார்.

காக்கரட்டான் பூ சாகுபடி செலவு வரவு கணக்கு

விவரம்

செலவு

வரவு

உழவு

1,000

 

பதியன் நாற்றாங்கால்

1,200

 

பார் கட்டுதல்

800

 

தொழு உரம்

2,400

 

நடவுக் கூலி

600

 

களை (ஆறு தடவை)

3,600

 

கடலைப் புண்ணாக்கு, காம்பளக்ஸ் உரம்

5,640

 

அறுவடைக் கூலி

64,800

 

மகசூல் தினமும் 45 கிலோ வீதம் எட்டு மாதங்களுக்கு 10,800 கிலோ சராசரி விலை கிலோ ரூ. 15.

 

1,62,000

மொத்தம்

80,040

1,62,000

நிகர லாபம்

 

81,960

இந்த வருமானம் சராசரி மகசூல் மற்றும் சராசரி விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. விசேஷ நாட்களில் இந்தப் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் வருவாய் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. உழவு, பதியன் நாற்று, பார் கட்டுதல், களைச் செலவுகள் முதல் வருடம் மட்டுமே இந்தத் தொகை, அடுத்தடுத்த வருடங்களில் லாபக் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது, 6,600 ரூபாய் கூடுதல் லாபமாகக் கிடைக்கும்.


பாடு இல்லாமல் பணம் தரும் பாரம்பர்ய எலுமிச்சை

 

சின்னச்சாமி ஜெயபாரதி தம்பதியர் அவர்கள் கூறுகையில்  திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று மூலனூரை அடுத்த நாரணாவலசு. பச்சைக் குடை விரித்து படர்ந்து நின்றன எலுமிச்சை மரங்கள். மஞ்சள் பொட்டுக்களாக தரை முழுவதும் உதிர்ந்து கிடந்தன எலுமிச்சம் பழங்கள். இது மொத்தமும் நாட்டு ரக எலுமிச்சைதான்.
27 அடிக்கு 27 அடி இடைவெளி
“எலுமிச்சை சாகுபடி செய்ய தண்ணீர் தேங்காத, மேட்டுப்பாங்கான நிலம் ஏற்றது. களர் நிலம் தவிர, மற்ற அனைத்து மண்ணிலும் செழிப்பாக வளரும். நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். பின்பு, வரிசைக்கு வரிசை 27 அடி, செடிக்குச் செடி 27 அடி இடைவெளியில் ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடியில் குழியெடுத்து, மழை மாதங்களில் (ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்) கன்றை நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் நடும்போது ஏக்கருக்கு 60 கன்றுகள் தேவைப்படும். கன்றுகள் சிறியதாக இருந்தால், பச்சைப் புழுக்கள் இலையைச் சாப்பிட்டு விடும். அதனால் எட்டு மாதத்திலிருந்து ஒரு வருட வயதுள்ள கன்றுகளாக நடவு செய்வது நல்லது. சொட்டுநீர்ப்பாசனம் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பாசனம் செய்யவேண்டும். (நேரடிப் பாசனம் என்றால், குறைந்தபட்சம் ஆறு நாளைக்கு ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்). நடவிலிருந்து இரண்டரை ஆண்டுகளில் எலுமிச்சை மகசூல் கொடுக்கத் தொடங்கும். நல்ல மகசூல் பெற ஐந்து வருடங்கள் ஆகும்.
ஆண்டுக்கு ஒரு உரம்
முதல் மூன்று வருடங்கள் மட்டும் செடிகளுக்கு இடையில் உள்ள களைகளை எடுத்து விட்டால் போதும். பிறகு, குடை போல விரிந்த செடிகள் நிழல் கொடுப்பதால் ‘களை’ என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் மரங்களைக் கவாத்து செய்து, புரட்டாசியில் (பருவ மழைக்கு முன்பாக) தொழுவுரம் 25 கிலோ மற்றும் கோழி எரு 10 கிலோவை கலந்து செடிகளைச் சுற்றிலும் உள்ள நான்கடி வட்டப்பாத்தி முழுவதும் கொட்டி விட வேண்டும். பருவமழை பெய்ததும் எரு நன்றாக கரைந்து சூடு ஆறிவிடும். மற்றபடி வேறு எந்த உரமும் செடிகளுக்குத் தேவையில்லை.
பறந்து போகும் பழ ஈ
எலுமிச்சையில் பழ அழுகல் நோய் தாக்கும். நன்கு பழுத்த பழங்களில் ஒரு வகை பழ ஈக்கள் அமர்ந்து காய்களைச் சுரண்டுவதால் பழங்களில் கரும்புள்ளிகள் தோன்றி, பழம் அழுகியது போல் ஆகிவிடும். இதைத் தவிர்க்க, 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கை, 20 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, அந்தக் கரைசலை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளித்தால் போதும்.
ஆண்டுக்கு 1,50,000
நாட்டு ரக எலுமிச்சையைப் பொருத்தவரை வருடம் முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். ஐப்பசி தொடங்கி மார்கழி வரை காய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், காய் ஒன்றுக்கு 50 பைசா, ஒரு ரூபாய் என்றுதான் விலை போகும். தை மாதம் முதல் வைகாசி வரையிலான பருவத்தில் காய்ப்பு குறைவாக இருக்கும். அதேசமயம், ஒரு காய் அதிகபட்சமாக 5 ரூபாய்க்குகூட விற்பனையாகும். ஆனி முதல் புரட்டாசி வரையிலானது நடுப்பருவம். நல்ல பராமரிப்பு இருந்தால் ஒரு செடியில் அண்டுக்கு 3 ஆயிரம் காய்களுக்குக் குறையாமல் கிடைக்கும்.
“சராசரியாக ஒரு காய்க்கு ஒரு ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், எங்க தோட்டத்துல இருக்கற 60 மரங்கள் மூலமா ஒரு லட்சத்தி எண்பதாயிரம் காய் கிடைக்கும். செலவு போக ஒரு லட்சத்து அம்பதாயிரம் ரூபாய் கையில் நிக்கும்”.
தொடர்புக்கு
சின்னச்சாமி
கடைக்கோடி கிராமம்
திருப்பூர் மாவட்டம்
அலைபேசி : 9942486180

 

[ 1 2 3 ]

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்