பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

 

வேளாண் பயிர்கள்

தானியங்கள்

சிறு தானியங்கள்

பயிறு வகை

எண்ணெய் வித்துக்கள்

பணப்பயிர்கள்

 
 
 
 
 
 
 
 
 
தோட்டக்கலைப் பயிர்கள்

பழவகைகள்

காய்கறிப் பயிர்கள்

பூப்பயிர்கள்
வாசனை மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள்
பானங்கள் மற்றும் போதைப் பயிர்கள்
சம்பங்கி
வனப்பயிர்கள் / மர வகைகள்
Agro forestry
யூகலிப்டஸ்


நெல்

  • நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில் நேர்த்தி செய்தால், நாற்றுக்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு உண்டாக்கும்.
  • கதிர் விடும் சமயத்தில் நெல் வயலில் ‘சைகஸ் சிர்சினாலிஸ்’ செடிமண் பூக்களை ஏக்கர் 4 இடங்களில் வைத்தால், அதிலிருந்து வரும் வாடை, கதிர் நாவாய் பூச்சியை விரட்டும்.
  • 30 கிலோ புளி விதையை ஒரு ஏக்கருக்கு நடவு நட்ட ஒரு நாள் பின்பு இட்டால் பயிர் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும்.
  • நீர்த்த கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து பின் விதைத்தால் இலைப்புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் குறையும்.
  • நெல் விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நெல் துங்ரோ மற்றும் நெல் குட்டை நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • நெல் விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தும்.
  • ‘I’ வடிவ மூங்கில் கழிகளை நெல் வயலில் பல இடங்களில் வைத்தால், பறவைகள் உட்கார்ந்து, நெல்லில்தாக்கும் பூச்சிகளின் புழு மற்றும் பூச்சிகளை உண்ணும்.
  • ஆடிப் பெருக்கு அன்று விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • நடவு வயலை 4 முதல் 6 தடவை உழவுச் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடவு செய்தால் - மகசூல் குறையும்.
  • காற்று திசையில் நடவு செய்தால், பயிர் நன்றாக செழிப்புடன் வளரும்.
  • சம்பா நடவு நெருங்கி நடு, நாவரை நடவு தள்ளி நடு.
  • ஆட்டுக்கிடை கோடையில் பொடு, அதிக மகசூல் பெறு.
  • ஆட்டுக்கிடை முதல் பருவம், பசுந்தாள் உரம் இரண்டாம் பருவம் இட அதிக மகசூல் கிடைக்கும்.
  • 100 கிலோ / ஏக்கர் பன்றி எரு இட்டால் 10 நாள் நடவு கழித்து இட்டால் அதிக மகசூல் பெறும்.
  • வேப்பம் புண்ணாக்குக்குப் பதில் வேப்பங்கொட்டை தூளை ஏக்கருக்கு இட்டால் நல்ல மகசூல் பெறலாம்.
  • களைகளைக்கட்டுப்படுத்த, விதைப்பிற்கு முன்போ அல்லது நடவுக்கு முன்போ, நீர்கட்டி களைகள் எல்லாம் முளைத்து வந்தவுடன், உழவுசெய்து, மண்ணில் மட்கச் செய்யவேண்டும்.
  • கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த, தக்கைப்பூண்டு செடியை பயிரிடலாம்.
  • நாற்றாங்காலில், இலைப்பேனை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தழை உரமாக இடவேண்டும்.
  • நெல்லில் இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம்புண்ணாக்கு சாற்றை தெளிக்கவேண்டும்.
  • இலை மடக்குப்புழு தாக்கிய வயலில், நாட்டு இலந்தை அல்லது அயிலை தாவர கிளையை புதைக்கவேண்டும்.
  • நெல்லில் தண்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்த, நீருடன் வேப்பெண்ணெய் 30 மிலி / லி என்ற விகிதத்தில் கலந்து  தெளிக்கலாம்.
  • தண்டு துளைப்பான் மற்றும் கதிர் காவாய் பூச்சியை கட்டுப்படுத்த செங்கல் சூளை சாம்பலை காலை வேளையில் இடலாம்.
  • கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்த, 10 கிலோ பசுமாட்டு சாணி சாம்பலுடன் 2 கிலோ சுண்ணாம்பு தூள் மற்றும் 1 கிலோ புகையிலை கழிவை கலந்து காலை வேளையில் பயிர் மீது தூவவேண்டும்.
  • கதிர் நாவாய் பூச்சியின் சேதாரத்தை கட்டுப்படுத்த, 100 மிலி கருவேல் இலை சாற்றுடன் 10 கிலோ சாணியுடன் 10 லி தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த, எருக்களைச் செடியை 12 அடி இடைவெளியில் நெல் வயலின் எல்லாப்புறமும் வளர்க்கவோ, நடவோ செய்யலாம்.
  • வேர் அழுகல் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.
  • பிரெளன் இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு உப்புடன் 15 கிலோ மணல் கலந்து இடவேண்டும்.
  • பிரெளன் இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த, விதை நெல்லை 20 % புதினா இலைக்கரைசலில் ஊறவைத்து விதைக்கவேண்டும்.
  • நெல் ‘துங்ரோ’ நோயைக் கட்டுப்படுத்த, ஆடாதொடை இலை சாற்றை தெளிக்கலாம்.
  • பனை ஓலையைக் குச்சியில் கட்டி, வயல் ஓரத்தில் நட்டால், ஓலைக் காற்றில் ஆடும்போது ஏற்படும் ஓசையாக நெல்மணிகளை உண்ண வரும் வாத்து, குருவியிலிருந்து நெல்மணியைக் காக்கலாம்.
  • ஒரு நெல் கதிரில் 100 நெல்மணிகள் இருந்தால் 20-22 குவிண்டால் / ஏக்கர் மகசூல் கிடைக்கும்.
  • 120 நெல்மணிகள் ஒரு கதிரில் இருப்பின், அதுவே முழு மகசூலாகும்.
  • 6 அடிக்கு அதிக உயரமுள்ள பெரியமண் குதிரில் அதிக நாள் வரை நெல்லைச் சேமிக்கலாம்.
  • சேமிப்புக் கிடங்கில் நொச்சி, புங்கம் இலைகளைப் போட்டால் தானிய சேமிப்பு கிடங்கில் ஏற்படும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • நெல்மணிகள், சேமிப்பதற்கு முன்பு, நெல்மணியுடன் புங்கம், நொச்சி மற்றும் வேம்பு இலைகளைக் கலந்தால் பூச்சித் தாக்கலை தடுக்கலாம்.

பாரம்பரிய பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறைகள

பாரம்பரிய சிறுதானிய வகைகள்

காரிகட்டி ராகி

காட்டுகம்பு – பேர்ள் மில்லட்

தட்டை வரகு

பூவாடன் கேழ்வரகு - ராகி

சோளம் (கோண சோளம்)

சிட்டன் சாமை

சென் சோளம் (காட்டு சோளம்)

காகா சோளம் (பாரம்பரிய சோளம்)

 

மக்காச்சோளம்

  • மக்காச்சோளத்தை கதிரின் மேல் உறையை உரிக்காமல் இருந்தால் மூன்று மாதத்திற்கு மேல் சேமிக்கலாம்.
  • மக்காச்சோள விதையை கோமியத்தில் 12 மணி நேரம் ஊறவைத்து விதைக்கவேண்டும்.
  • விதைப்பிற்கு முன்பு, வெந்நீரில் 3-6 மணி ஊறவைத்து, பின்பு நிழலில் உலர வைத்து விதைத்தால், நல்ல முளைப்புத் திறனுடன், குருத்து துளைப்பானையும் கட்டுப்படுத்த முடியும்.
  • தக்காளிக்கு பின்பு நடும் போது, அதை மேட்டுப்பாத்தியில் விதைத்தால். நிலம் தயார் செய்யும் செலவு குறையும்.
  • மக்காச்சோளம் கதிர் நன்கு முதிர்ந்து காய்ந்ததை அறிய சில சோளத்தை வாயில் போட்டு குடித்தால் உலோக ஓசை வரும்.
  • கல் படுக்கை மீது, காய வைத்த மக்காச்சோளத் தட்டையை அடுக்கி அதன் மீது நெல் வைக்கோலால் மூடி வைத்தால், அதை கால்நடைத்தீவனமாக ஒரு வருடத்திற்கு மேலாக சேமித்து பயன்படுத்தலாம்.

கம்பு

  • பறவையை விரட்ட, காக்கா போன்ற மாதிரி செய்து, அதை நீண்ட கம்பில் கட்டி நடு வயலில் வைக்கவேண்டும்.
  • நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • கம்பு விதையை உப்பு கரைசலில் ( 1 கிலோ  10லி / நீரில்) போட்டால், மிதக்கும் நோய் தாக்கப்பட்ட விதையை நீக்கி நல்ல விதையைப் பெறலாம்.
  • விதைப்பிற்கு முன்பு நீரில் இரவு முழுவதும் ஊற வைத்தப்பின் விதைத்தால் விரைவாக முளைக்கும்.
  • மேட்டுப்பாத்தி அமைத்து, நாற்றாங்கால் செய்து பின் விதைப்பின் நல்ல நாற்றுக்களைப் பெறமுடியும்.
  • நடவுக்கு முன்பு, நாற்றுக்களின் நுனியை கிள்ளி நட்டால், பூச்சியின் முட்டை, வெள்ளை ஈக்களை அப்புறப்படுத்துவதோடு, நுனி கருகல் நோயையும் கட்டுப்படுத்தலாம்.
  • இலைகளின் உட்பக்கத்தில் உட்காரும் பச்சை தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த, செங்கல் சூளை சாம்பலை தூவவேண்டும்.
  • இலைச்சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த, தட்டைப்பயிரை ஊடுப்பயிராக கம்புடன் செய்யவேண்டும்.

சோளம்

  • சோளக் கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை உதிர்க்காமல் அப்படியே ‘பட்டரையில்’ சேமித்தால் தேவைப்படும்போது எடுத்து, கதிர் அடித்து, மணிகளைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.
  • மாறுபட்ட காலநிலையிலும், நல்ல முளைப்பு திறனைப் பெற சோள விதைகளை சாதாரண உப்பு கரைசலில் ஊற வைத்து, விதைக்கவேண்டும்.
  • சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின் வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயையும் கட்டுப்படுத்தலாம்.
  • விரைவாக முளைக்கவும் தண்டு ஈ தாக்குதலை தடுக்க, போதிய அளவு சுடுநீரில் வைத்து, அதை திறந்த வெளியில் இரவு முழுவதும் ஆறும்படியாக வைத்திருக்கவேண்டும். அடுத்த நாள் விதைப்பிற்கு முன்பு, சோள விதைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைத்தால் நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம்.
  • இனப்பயிரின் ஊடே நாட்டுக் கலப்பையை ஓடவிட்டால், சராசரி செடி எண்ணிக்கை இருக்கும்படி செய்யலாம்.
  • வைகாசி - ஆனி (மே - ஜீன்) மாதத்தில் விதைத்தால், தண்டு ஈ மற்றும் துளைப்பான் தாக்குதலை தடுக்கலாம்.
  • சோளத்துடன், தட்டைப்பயிரை ஊடும்பயிர் செய்தால், தட்டைப்பயிரின் நெடி, தண்டு தாக்குதலை தடுக்கலாம்.
  • அவரையை ஊடுப்பயிர் செய்தாலும் தண்டு துளைப்பான் தாக்கம் குறையும்.
  • வேப்பம் புண்ணாக்கு கரைசலைச் சொட்டுச் சொட்டாக தண்டில் ஊற்றினால் குருத்து துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தாக்குதலிலுள்ள இலைகளின் மீது, சாம்பலைத் தூவினால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் சாம்பல் தூவுவதால் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • கொத்தமல்லியை சோளத்துடன் கலப்பு பயிராக பயிர் செய்தால் ‘ஸ்ரைகா’ எனப்படும் தொத்துக் களையை கட்டுப்படுத்த முடியும்.
  • கறுப்பு துணியை நீளமான பூச்சிகள் கட்டி, நடுவயலில் வைத்தால் காக்காவை விரட்டும்.
  • தானிய சேமிப்பு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, சோளத்துடன் சாம்பலை கலந்து வைக்கலாம்.

ராகி

  • அறுவடை சமயத்தில் மழைக்காலத்தில் பாதிக்காத வகையில் இருக்கவேண்டுமெனில் நீண்ட நாள் இரகங்களை மானாவாரியாக பயிரிடவேண்டும்.
  • 1:10 என்ற விகிதத்தில் கோமியம், தண்ணீர் கலந்து கரைசலில் ராகி விதையை ஊற வைத்தால், முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

துவரை

  • புகையிலை கழிவு கரைசல் சாற்றை தெளிப்பதால், சாறு உறிஞ்சும் பூச்சியையும் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • துவரை பயிருடன் செம்மண் கலவை கலந்து, காயவைத்து, சேமித்தால் சேமிப்பு கிடங்கு பூச்சி தாக்குதல் தடுக்கலாம்.
  • ஆமணக்கு விதையை வறுத்து, தூளாக்கி அதைத் துவரைப் பயிறுடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதலைத் தடுக்கலாம்.
  • துவரைப் பயிருடன் ‘அக்கோரஸ் கலாமஸ்’ தாவர இலைத்தூளுடன் (50 கிலோ 1 கிலோ என்ற விகிதத்தில்) கலந்து சேமித்தால் ஒரு வருடம் வரை சேமிக்க முடியும்.
  • நன்கு காயவைத்த துவரைப் பயிரை கோணி சாக்குப்பையில் சேமிக்கும் முன்பாக காய்ந்த நாய் துளசி இலைகளை அடியில் இட்டு பின் சேமித்தால், காய் துளைப்பான் தாக்கத்தைத் தடுக்கலாம்.
  • துவரை சேமிக்கப்பட்ட கலன்களில் காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால், வண்டு தாக்குதலை தடுக்கலாம்.

உளுந்து

  • மரக்கட்டைக் கொண்டு, காய வைத்து உளுந்து பயிரின் மீது அழுத்தினால் பயிரானது இரண்டாக உடைந்தால் அதுவே போதிய காய்ச்சலுக்கு அறிகுறி.
  • உளுந்து பயிரை தனியாக பிரிக்க, காயவைத்து தளத்தின் மீது, மாடு கட்டி. கல் உருளையை இழுக்கவேண்டும்.
  • செப்டம்பர் மாதத்தில் பின் 15 நாட்களில் விதைத்தால், அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பஎண்ணெயை தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • உளுந்து பயிருடன் சாம்பல் கலந்து, மண்கலத்தில் சேமித்தாலும் அதிக நாள் சேமிக்கலாம்.
  • உளுந்து பயிருடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் அதிகரிக்கும்.
  • இரண்டாக உடைந்த உளுந்தை சேமித்தால், கூண்வண்டு தாக்குதிலிருந்து தப்பலாம்..

கொண்டைக்கடலை

  • அதிக பனி பெய்யும் மாதங்களில் (ஜனவரி), கொண்டைக்கடலை போட்டால், பயிர் வளர்ச்சி பாதித்து, குறைந்த மகசூல் கிடைக்கும்.

தட்டைப்பயிறு

  • மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, கடைத்தெடுத்த மோரைத் தெளிக்கலாம்.
  • நல்ல பாதுகாப்பாக சேமிக்க வேண்டுமெனில், மண் கலத்தில் 5ல் 4 பங்கு தட்டைப்பயிரை இட்டு அதன் மேல் மீதமுள்ள பகுதியில் சாம்பலைக் கொண்டு நிரப்பவேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு மேலாக சேமிக்க வேண்டுமெனில், தட்டைப்பயிற்றை செம்மண் கலவையில் கலந்த, காய வைத்து எடுத்து வைக்கவேண்டும்.

அவரை - மொச்சை

  • உரிக்காத காய்களை அப்படியே வைத்திருந்தால், நீண்ட நாட்கள் சேமிக்க முடியும்.

நிலக்கடலை

  • நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்.
  • உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம்.
  • மணல் கலந்த மண்ணோ நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில், அங்கு குறைந்த அளவே பருப்புகளை கடலை உருவாகும்.
  • மணல் கலந்த மண்ணே  நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில்  அங்கு குறைந்த  அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும்.
  • வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு கவரும் செடியாகிவிடும்.
  • இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில் வைக்கோல் எரித்தால், அதன் அருகில் வைத்திருக்கும் நீரிலோ ஆமணக்கு கலந்த நீரிலோ, தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் விழும்.
  • சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • புகையிலை வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.
  • கோடை உழவு செய்வதால், சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை வெளியேற்றி அழிக்கமுடியும்.
  • 10 கிலோ / சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி 600 செ வெப்பநிலையில் தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள்  20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.
  • இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
  • ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
  • 4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பாரம்பரிய எண்ணெய் வித்து இரகங்கள்

கருப்பு எள்

சிவப்பு எள்

கொத்து கடலை -  நிலக்கடலை கொத்து இரகம்

கடலைக்காய் – பாரம்பரிய நிலக்கடலை

எள்

  • எள் விதை விதைக்கும் போது மணலுடன் கலந்து விதைப்பதால். ஒரே சீராக விதைக்க முடியும். மற்ற பயிரைக்காட்டிலும் எள்ளுக்கு அதிக உரம் தேவைப்படும்.
  • எள் எண்ணெய் எடுக்கும்போது, பனை வெல்லத்தைச் சேர்ப்பதால் அதிக எண்ணெயை பிழிந்தெடுக்க முடியும்.
  • எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) மண் கலத்தில் சேமித்தால், ஒரு வருடத்திற்கு மேலாக கெடாமல் சேமிக்க முடியும்.
  • சிறுதுண்டு பனை வெல்லத்தை நல்லெண்ணெயில் இடுவதால், அதிக நாள் கெடாமல் வைக்கமுடியும்.

சூரியகாந்தி

  • அதிக மகசூல் பெற, இரண்டு செடி பூக்களை ஒன்றோடு ஒன்று உரச வேண்டும்.
  • விதைப்புக்கு முன்பு, சாணத்தை நிரத்தில் இட்டால், (head) பெருகி வரும்.

ஆமணக்கு

  • ஆமணக்கு வயலைச்சுற்றி 1 கிலோ வெள்ளைச் சோளத்தை இட்டால், அதை உண்ண வரும் பறவைகள் ஆமணக்கு புழுவை உண்ணும்.
  • 2 கிலோ வேப்பிலையை 2-3 லி வெள்ளாடு கோமியத்தில் ஊறவைத்து அதை நீர்க்கவேண்டும் 500 மிலி நீர்த்த கரைசலில் 15 லி நீர் கலந்து தெளித்தால் ஆமணக்கு புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • விதைப்பதற்கு முன்பு விதையை 20 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைத்தால் விதை விரைவாக முளைக்கும்.
  • வேப்பஎண்ணெய் 20 மிலியை தூளை கோணிப்பையில் கட்டி தண்ணீரில் 8 மணி நேரம் பையை வைத்திருந்து பின் அக்கரைசலுடன் சோப் கரைசலை கலந்து தெளித்தால் ஆமணக்குப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • 5 கி வேப்பங்கொட்டை தூளை கோணிப் பையில் கட்டி, தண்ணீரில் ஊறவைத்துப்பின் அக்கரைசலை தெளித்தால் சாறு உறிஞ்சி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஆமணக்கு விதையை ஒரு வருடம் வரை சேமித்து வைத்தாலும் அவை சாகாது.

பருத்தி

  • விதையின் மேல் உள்ளபஞ்சை நீக்குவதற்கு, ஈர மாட்டு சாணத்துடன் விதையை கலந்து, 30 நிமிடம் காய வைத்து பின் கல் தரை மீது மெதுவாக உரசினால் பஞ்சு நீங்கிவிடும் பின் தூய்மைப்படுத்த வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதையை செம்மண் பூச்சு பூசி, வெயிலில் உலர்த்தி உபயோகித்தால் விதை நன்கு முளைப்பதோடு, விதைப்பிற்கும் ஏதுவாகும்.
  • பருத்தி விதையை ஒரு கிலோவிற்கு 200மிலி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து, பசும்மாட்டு சாணத்தை தடவி பின் இரவு முழுவதும் காய வைத்து விதைத்தால், பூச்சித் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • கடலைப் புண்ணாக்கை 3 முறை பயிர் காலத்தில் இடுவதால், பயிர் வளர்ச்சி துரிதப்படுத்துவதோடு, காய் பிடிப்பதும் அதிகரிக்கும்.
  • ஆமணக்குச் செடியை ஊடுபயிராகவோ, வரப்புப் பயிராகவோ பருத்தியுடன் நட்டால் அது புகையிலை வெட்டுப்புழுவை கவரும்.
  • மக்காச்சோளம், வெண்டையை ஊடுபயிராக நட்டால் காய்புழு தாக்குதலை குறைக்கலாம்.
  • மீன் கழிவை வெல்லத்துடன் 2:1 என்ற விகிதத்தில் வயலில் அங்கு இட்டால், கொக்கு மற்றும் புல்புல் வகைப் பறவைகளை அவை கவரும் இதன் மூலம் புகையிலை வெட்டுப்புழுவை உண்ணப்பட்டு தாக்குதல் குறையும்.
  • 5 கிலோ வேப்பங்கொட்டையைத் தூளாக்கி, 100 லிட்டர், தண்ணீரில் இட்டு ஒரு நாள் ஊறவிட்டு பின் வடிகட்டி நீர் சேர்த்து, சோப் கரைசல் கலந்து, பருத்திக்கு தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை 10 துண்டுகளாக வெட்டி, அதை மஞ்சள் தூள் ஊறவைத்துப் பின் காயவைக்கவும். பின் அதை மீண்டும் ஆமணக்கு எண்ணெய் மூழ்கவைத்து. வயலில் பல்வேறு இடங்களில் கட்டவேண்டும். அதன் கீழே சிம்னி விளக்கை வைத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
  • அரளி விதையை தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படும்.
  • 600 கிராம் புகையிலையை தண்ணீரில் 2 முதல் 3 நாட்கள் வரை ஊறவைத்து பின் வடிகட்டி தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • சர்க்கரை கரைசலுடன் வேப்ப எண்ணெய் கலந்து அதை நீரில் கலக்கி பருத்தி செடி மீது தெளித்தால், மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • சாம்பலை பருத்தி இலை மீது தூவினால், அசுவின், இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.
  • சோளம் அல்லது கம்பு பயிரை பருத்தி பயிரைச் சுற்றி சாகுபடி செய்தால் வெள்ளை ஈ மற்றும்  இலைப்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • வேப்பங்கொட்டையை வசம்புடன் சேர்த்து தூளாக்கி, இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, பின் வடிகட்டி, பயிருக்கு மறுநாள் தெளித்தால் எல்லாவித பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம்.
  • பருத்தி பஞ்சை காலை வேளையில் மட்டும் எடுத்தால் தூசிபடுவது தவிர்க்கலாம்.
  • பருத்தியில் பூக்களும், இளங்காய்களும் விழுகாமல் இருக்க 50 மிலி ஆமணக்கு எண்ணெய்யை ஒவ்வொரு செடிக்கும் பயன்படுத்துவதால், செடி அருகே வெப்பம் குறைந்து, உதிர்வது  தடுக்கப்படும்.
  • ‘மகா’ என்று அழைக்கப்படும் பருவத்தில், பெய்யும் மழைநீரைச்சேமித்து, பயிருக்கு பின் பயன்படுத்தினால் அது வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
  • பருத்தியில் நல்ல அதிக உரம், மழைப் பெறப்பட்ட பகுதியில் உள்ள நன்கு உயரமாக வளரும். அதை அப்படியே விடாமல் அதன் நுனியைக் கிள்ளிவிட்டால் அதிகமாக காய் பிடிக்கும் (குஜராத்).
  • பருத்தி  செடியை பனியின் பாதிப்பிலிருந்து காக்க, பருத்தி சேடி வயலிற்கு அருகில் சாணி எரு, புல் கழிவு, வீணான எஞ்சின் ஆயிலைப் பயன்படுத்தி புகை மூட்டம் செய்தும், நீர்ப்பாய்ச்சியும் காக்லாம். சில விவசாயிகள் உயரமான செடியை பருத்தி வயலைச் சுற்றி அமைத்து, பனியிலிருந்து பருத்திச் செடியைக் காக்கலாம் (குஜராத்).
  • பருத்தியில், அசுவினி தாக்குதலைத் தடுக்க எருக்கலை இலையை நீர்ப்பாய்ச்சின வாய்க்காலில் இடவேண்டும்.
  • கடுகு செடியில் அசுவனி தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பிலை மற்றும் அதன் சிறிய தண்டுகளை  எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலை ‘பாலிடால்’ தூளுடன் கலந்து தூவலாம்.
  • பயறு வகைப் பயிர்களில் அசுவினித் தாக்குதலைக் கட்டுப்படுத்த புகையிலை வடிநீருடன் சோப் கரைசல் சேர்த்து தெளிக்கலாம்.
  •  ‘குதிரை மசால்’ என்ற தீவனப்பயிரில் ஏற்படும் அசுவினியைக் கட்டுப்படுத்த, எருக்கலை கிளையை வெட்டியவுடன் உடனே நீர்ப்பாசன வாய்க்காலில் போட்டு வைக்கலாம்.
  • பருத்தியில் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு பாசன நீருடன் கலந்து விடலாம்.
  • குதிரை மசால் பயிரில் அசுவினியைக் கட்டுப்படுத்த, அடுப்பு சாம்பலையோ அல்லது சாணி எரு சாம்பலையோ தூவலாம்.
  • பருத்தியால் அசுவினி மற்றும் புள்ளிக்காய்ப்புழு கூட்டுத் தாக்குதலைக்கட்டுப்படுத்த காய்ந்த புகையிலை இலை 250 கிராம் கிரகாசி 300 கிராமுடன் சிட்ரிக் அமிலம் கலந்து பின் 12 லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் 250 மிலி மருந்து 15 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து ஒரு தெளிப்பானுக்கு என்னும் அளவில் 4 தெளிப்பான் அளவு அடித்தால் பூச்சிக் கட்டுப்படுத்துவதோடு, பருத்திச் செடியில் நன்கு வளரும் (குஜராத்).
  • பருத்தியில் காணப்படும் தரைக் கூண்வண்டை கட்டுப்படுத்த, 20-25 கிலோ வெங்காயத்தை சணல் பையில் இட்டு, ஒரு மரக்கட்டைக்கொண்டு நசுக்கி, அப்படியே அந்த சணல் பையை நீரோட்டத்தில் போட்டால் போதும் (குஜராத்).
  • பருத்தி, கனகாம்பரம் மற்றும் இதர அழகு பூச்செடிகளுக்கு ‘அகேல்’ வெட்டிக்கோட்டை வேம்பு, புங்கம் புண்ணாக்கும், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக இடித்து, அதைக் கோமியத்தில் ஊறவைத்து, பின் வடிகட்டி அத்துடன் 1:8 பங்கு நீர் சேர்த்து தெளித்தால், பூச்சி நோய்கள் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
பருத்தியைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
  • கைவினை முறை சாணி கொண்டு பூஞ்ச நீக்கம் செய்து, பூச்சியினால் சேதாரம் அடைந்த விதைகளை நீக்குதல், செடியில் புழுக்களை கையில் சேகரித்தல் அழித்தல், சேதாரம் அடைந்த பயிர் பாகத்தை நீக்குதல்.
  • பயிர்சுழற்சி முறை வயலில் களைகளை நீக்கி எப்போது சுத்தாக வைத்தல், ஊடுபயிர்  / கலப்பு பயிராக சோளம், மக்காச்சோளம், பச்சைப்பயிறு, உளுந்து போன்றவற்றை வளர்த்தல். முக்கிய பூச்சிகளுக்கு எதிரியாக உள்ள பூச்சிகளை பாதுகாத்தல்.
  • தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பிலைசாறு, வேப்பங்கொட்டை சாறு தெளித்தல்.
  • செருப்பு தைப்பவர்கள். தோல் ஊற வைத்திருக்கும் சாம்பல் நீரை சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தெளித்தல் அல்லது நன்கு புளித்த மோரையோ அல்லது நொதித்த கோமியத்துடன் வேப்பங்கொட்டை சாறு கலந்தோ அல்லது மண்ணென்ணெயை தெளித்தால் பூச்சிகளின் கூட்டு சேதாரத்தைக் கட்டுப்படுத்தலாம் (மத்தியப்பிரதேசம்).
  • பருத்தியில் ஏற்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகள் அல்லாத பிற முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை 25 சதவீதம் குறைப்பதோடு அதிக லாபத்தையும் ஈட்ட, கோடையில் ஆழ் உழவு செய்தல்  ஒளி பொறி வைத்தல், நுனிக் கிள்ளுகதால் புள்ளி காய்ப்புழுவின் முட்டை, புழுக்களை அகற்றுதல். சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புள்ள இரகங்களை தேர்வு செய்து நடுதல், 5 சதவீதம் வேப்பங்கொட்டை பருப்பு சாறு அடித்தல், புகையிலை சாறு தெளித்தல், மிளகாய் - பூண்டு கரைசல் தெளித்தல். சாணி மற்றும் கேமியம் கரைசல் தெளித்தல், பறவைகள் பூச்சி புழுக்களை பிடிக்க வகைச்செய்தல், பூச்சித் தாக்கிய காய்களை சேகரித்து ஆழித்தல் போன்ற முறைகளைக் கையாளலாம்.
  • பருத்தி வெள்ளை ஈயைக்கட்டுப்படுத்த பேப்பர் கழிவுகளை ஆமணக்கு எண்ணெய் அ்லது ‘கிரீஸ்’ பெடரோல் கழிவு எண்ணெயில் தோய்த்து, வயலில் இடவேண்டும். பின் தெளிப்பான், கொண்டு செடி மீது காற்றை தெளித்தால், செடியின்  சாற்றைப் பூச்சியான வெள்ளை ஈ, செடியிலிருந்து விடுபட்டு, எண்ணெய் பேப்பர் கழிவின் மேல் ஒட்டிவிடும்.  இவ்வாறு செய்தால்  90 சதவீதம் வெள்ளை ஈயை வெற்றிகரமாக குறைக்கலாம் (பாண்டிச்சேரி).
  • பருத்தியில்,  தாய் பூச்சிகளைக் கவர்ந்து, அழிக்க, 500 கிராம், சர்க்கரையை சமையல் எண்ணெய் கலந்து நொதிக்க வைத்து, அந்தக் கலனில்  சமையல் எண்ணெய் சிலதுளி சேர்த்து, வயல்களில் பருத்தி வரிசைக்கு ஊடே வைத்தால், அக்கரைசலில் வாடாமல் பூச்சி கவரப்பட்டு அதில் விழுந்து அழிந்துவிடும்.
  • பருத்தியைப் பாதிக்கும் புழுக்களை எருக்கலை பாலைத் தண்ணீருடன் 1:15 விகிதத்தில் கலந்து தெளித்தால், 3 நாட்களில் திறம்பட கட்டுப்படுத்தும்  இத்தெளிப்புக்கு பின்பு வரும்  தளிர்களில் புழுத்தொல்லை இராது (குஜராத்).
  • பருத்தியில் பச்சைக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த, 250-300 கிராம் ஊமத்தை இலையுடன் கூடிய தண்டினை 1 லிட்டர் சூடான நீரில் போட்டு வைத்து, பின் அந்தத்தண்ணீர் குளிர்ந்தவுடன்ள நீரை எடுத்து அதில் 15 லிட்ட் தண்ணீர் சேர்த்து தெளித்தால் 6-7 மணி நேரத்திற்கு பூச்சித் தாக்குதல் குறையும். இவ்வாறு ஒரு மாதம் ஆனசெடிக்கு செய்தால் நல்ல கட்டுப்பாட்டைத் தரும் (குஜராத்).
  • பருத்தியில் சிவப்புப் புள்ளி நோயைக் கட்டுப்படத்த, அது ள தோன்றும் போதோ அல்லது முன் தடுப்பாகவோ நீர்த்த மோரை, பயிர் மீது தெளித்தால், போதும் (குஜராத்).
  • பருத்தியில் வெள்ளை ஈக்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 30 கிராம் / 15 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துக் கலவைக்கு என்ற அளவில் புகையிலைத் தூளைக் கலந்து அடிக்கலாம் (குஜராத்).
  • பருத்தி வயலைச்சுற்றி 2-3 வரிசை வெண்டைப் பயிரை நட்டால், பருத்தி தாக்கும் புள்ளிக் காய்ப்புழு, படைப்புழு, தத்துப்பூச்சி முதலில் வெண்டையைத் தாக்கும் எனவே அந்த வெண்டையைப் பிடுங்கி  அழிப்பதால் பருத்தியை பூச்சித் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
  • பருத்தி காய்ப்புழு, கொண்டைக்கடலை மற்றும் துவரை காய்த் துளைப்பானைக் கட்டுபடுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிக்கலாம்.
  • பருத்தியை புழுக்களை அழிக்க, மண்ணெண்ணெயை அரவில் பருத்தி  வயலில் அடிப்பதால் , இரவில் ளஉண்ணும் புழுக்களை அழிக்க முடியும். மேலும் அவை பகலில் நிலத்தில் அடிக்கு  போகிறது, மண்ணெண்ணெய் கலனை நீர்ப்பாசனம் செய்யும்போது, அந்த வாய்க்காலின மீது இருக்கும்படி அனைத்து பகுதிகளுக்கும் சென்று, தெளிப்பதைக் காட்டிலும் ள அதிகமாக புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் நன்மை செய்யும் சில நிலத்தில்  வாழும் ள புழுக்களையும் அழித்துவிடுகிறது (குஜராத்).
  • அரளி விதையை / காய்களை இடித்து, இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தண்ணீர் சேர்த்து பருத்தி வயலில் தெளிப்பதால் 70 சதவீதம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பருத்தியில், 1 கிலோ சர்க்கரையை 12 லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி (கனமாக பருத்தி துணிக்கொண்டு), தெளித்தால், சிறிய பூச்சியான வெள்ளை ஈ, அதன் முட்டைமீது ஒட்டிக்கொண்டு விடுவதால், அவை கொல்லப்படுகின்றது. ஏக்கருக்கு 56 லிட்டர் கரைசல் தேவைப்படுகிறது. அம்முறை ஒரே ஒரு மறை மட்டுமே நவம்பர் - டிசம்பர் மாதங்களில் செய்யப்படுகிறது. ஏனெனில் அக்கரைசல்  ‘மதியா’  நோய் ஏற்பட காரணமாகிறது.
  • புகையிலை இலை / விதை, வேப்பங்கொட்டை / வேப்பிலையை தண்ணீர் ள போட்டு கொதிக்க வைத்து, தெளித்தால் பருத்தியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • 20-25 கிலோ சாதாரண உப்பை, இயற்கை உரம் 10 வண்டியோடு கலந்து, பருத்தி சால்களில் இட்டால், செடிகளுக்கு பூச்சி எதிர்ப்புச் சக்தி உருவாக்கி, மகசூல் 3ல் ஒரு பங்கு அதிகரிக்கும் (குஜராத்).
  • விவசாயிகள், பசுமாட்டு சாணத்தை வீட்டில்  வளர்க்கும் மாடுகளிலிருந்து பெற்று உரமாக பயன்படுத்தகிறார்கள். அவ்வாற மாட்டு கொட்டிலுக்கு உள்ளேயும், வெளியேயும் சேகரிக்கும் சாணத்தை தாழ்ந்த பகுதிகளில் வீட்டிற்கு வெளியே மொத்தமாகவோ , உயர்ந்த பகுதி ஏனில். நேரடியாக வயலிலும்  குவியலாக சேமிக்கலாம். அதை மணல் சாந்துகொண்டு மூடிவைத்தால் காற்றினால் அவை பறக்காமல் இருக்கும். பின்பு வயலுக்கு மூங்கில் கூடைகளில் அள்ளி மனிதர்களோ, குதிரைகளைக் கொண்டு வயலில் சேர்க்கும். அப்படிப்போக ஏக்கருக்கு  125-250 குவிண்டால் எரு தேவைப்படும். விவசாயிகள் ஆட்டு எருவை விட  மாட்டு எருவையே அதிகம்  இடுகிறார்கள். ஏனென்றால் ஆட்டு எரு, அதிக அளவு தழை (3 %),மணி (1 %), சாம்பல் (2 %), சத்துக்களை கொண்டதால் அதிகம் இட்டால் பயிர்களை எரித்துவிடும் / காயவைத்து விடும் (இமாச்சலபிரதேசம்).
  • பருத்தி விதைக்கு உள்ள பஞ்சை நீக்க விதைப்புக்கு ஒரு நாள் முன்பு, தகுந்த அளவு எடுத்து, கரைத்து / சேர்த்து, அதை விதை மீது தெளிக்கவேண்டும். பின்  அவ்விதைகளை தேய்த்தால் நன்றாக கலவை ஒட்டிக் கொள்ளும். பின அதை நிழலில் உலரவைத்து, முளைக்க பயன்படுத்தினால் சுலபமாக விதைக்க முடிவதோடு அல்லாமல் நல்ல முளைப்பு திறனுடனும் 10 சதவீதம் கூடதல் மகசூலையும் தரும் (மகாராஷ்டிரா).
  • காரிப் பருவத்தில் மகாராஷ்டிராவில் பருத்தியும், கம்பும் பயிரிட்டு வந்தனர். பின் பருத்தி பயிரிடும் பரப்பு அதிகமானதால், உணவுக்கும் தீவனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் காரீப் பருத்திக்கு ள பின் ஜனவரி மாதத்தில் ள அதிக அளவு (இரண்டு மடங்கு) கம்பு விதையை பயன்படுத்தி, சாகுபடி செய்ததில் அதிக மகசூலும், பூச்சி நோய்த் தாக்காத தரம் வாய்ந்த கம்பும் தீவன தட்டையும் கிடைத்தது.
  • பருத்தியை, மழை வரும் காலத்திற்கு ( 8-10 நாட்களுக்கு) முன்பே, விதைத்தால், போதியளவு  மழைக் கிடைத்தவுடன் முளைக்கத் தொடங்கி 10 சதவீதம் மகசூலை தரும், போதிய அளவு மழைக் கிடைக்காவிடில் திரும்ப விதைக்க வேண்டி வரும். இதைப்போல், நெல், துவரை, வறட்டு விதைப்பு செய்யலாம்  (மகாராஷ்டிரா).
  • விவசாயிகள் போதியளவு நீர்ப்பாசன வசதி இருந்தால், 3-4 ளபருத்தி பஞ்சு எடுத்தபின், மறுதாம்பு பயிராக விட்டு, உரமிட்டு, 2-3 நீர்க்கட்டியினால், எக்டருக்கு 10-15 குவிண்டால், அதிகமான விளைச்சல் கிடைக்கும் (மகாராஷ்டிரா).
  • ஆழமான கருமண்ணில் புன்செய்ப் பயிராக மழைக்காலத்தில் பயிரிடும் பருத்தி நவம்பர் மாதங்கள் வரை மகசூல் தருகிறது. ஆனால் தற்சமயம் மழையானது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் பெய்வதால், புதிய தளிர்கள், கிளைகள், பூக்கள், காய்கள் விடுகிறது, எனவே களையெடுப்பு மட்டும் செய்தால், பூக்கும் பூக்கள் 2 மாதங்களில் காயாக வெடித்து மட்டும் செய்தால், பூக்கும் ஒரு எக்டருக்கு  கிடைக்க வாய்ப்புண்டு.
  • பருத்தி பயிருடன் சோளமும் கலந்து கலப்புப் பயிராக விதைத்தால், சோளப் பயிரை உண்ண வரும் பறவைகள், பருத்தி செடியில் உட்காரும் பூச்சிகளைச் சேர்த்து  தின்றுவிடும் (மகாராஷ்டிரா).
  •  பிளாஸ்டிக் கலனில் மாவை 200 லிட்டரில் கலந்து, அப்படியே உரக்குவியலுக்கு அடியில் 8 நாட்கள் வைத்திருந்தால் நன்கு புளித்துவிடும். அதை பயிருக்கு பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
  •  பூண்டினை இடித்து தண்ணீரில் போட்டு, அதை வடிகட்டி அத்துடன் மானோகுரோட்டாபாஸ் கலந்து தெளித்தால் பருத்தி காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம் (மகாராஷ்டிரா).
  • பருத்தி செடிக்கு சிறிதளவு சர்க்கரைப் போட்டால், எறும்புகள் அதிகமாக வரும். பருத்தியைச் சேதப்படுத்தும்  அசுவினி, காய்ப்புழுக்களை அதிக அளவு செலவில்லாமல் எந்த தொழில்நுட்ப வேலையும் இல்லாமல் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
  •  புகையிலையை இரவு முழுவதும்  நீரில் ஊறவைத்து வடிகட்டி தெளித்தால் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
  • 500 கிராம் பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் அரைத்து சாறு எடுத்து அதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, 200 கிராம் சோப்பு  சேர்ந்து, தெளித்தால் பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளுடன் மற்ற  பூச்சிகளும் கட்டுப்படுத்தலாம்.
  •  பருத்தி, மிளகாய், வெங்காயம் இவற்றில் காய்ப்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 5 கிலோ வேப்பங்கொட்டையை வெயிலில்  காய வைத்து, தூளாக்கி 10 லிட்டர் தண்ணீரில்  இரவு முழுவதும் ஊறவைத்து 90 லிட்டர் தண்ணீரும் 500 கிராம் சோப்பை ஒட்டுத் திரவமாக சேர்த்து தெளிக்கலாம்.
  • பருத்தி மற்றும் காய்கறிப் பயிர்களில் அசுவின், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, சாம்பலை தூவலாம். பின் பசுமாட்டு கோமியம் மண்ணெண்ணெயை, சோப்பு தூளாக்கி கலந்து தெளித்து மேற்கண்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் (மகாராஷ்டிரா).
  •  உணவுத் தானியங்களைச் சேமிக்க, மூங்கில், பருத்தி குச்சியிலான கலன்களைத் தயாரித்து, அதில் இட்டு பின் காற்று புகாதவாறு மண், சரணி சாந்தைப் பூசி சேமித்தால், அதிக நாள் கெடாமல் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்கும். கலனில் வேப்பிலையைத் தானியத்துடன் கலந்தும் வைக்கலாம் (மகாராஷ்டிரா).
  • விதைகள் மீது சாணி, மண் இவற்றை சம அளவுக் கொண்ட சாந்தைத் தெளித்து பின் விதைகள் மீது சாந்து நன்றாக படும்படி தரையில் தேய்த்து, விதைகளை காய வைத்து விதைக்கப் பயன்படுத்தலாம். சுலபமாக ள விதைக்க மூடியும், அத்துடன் விதைகள் நன்கு முளைத்து அதிக மகசூல் தரும் (மகாராஷ்டிரா).
  •  பல்வேறுபட்ட பயிர் இனங்களைக் கலந்து பழங்காலத்திலிருந்து விதைத்து வருகிறார்கள். அதனால் பூச்சி நோய்களுக்கு  குறைகிறது. மக்காச்சோளம், செண்டுமல்லி - நூற்புழு எண்ணிக்கை குறைகிறது. தக்காளி, சணக்கு - தக்காளி மகசூல் கூடுகிறது. நெல், பூண்டு, மக்காச்சோளம், தக்காளி - நூற்புழு எண்ணிக்கை குறைகிறது. நெல், புகையிலை, நெல் - வேர் முடிச்சு நூற்புழு கட்டுப்படும். சூரியகாந்தி + பருத்தி - இலை தத்துப்பூச்சி சேதாரம் குறையும். சோளம் + தட்டைப்பயிறு (1:1) -  சோளம் தண்டு துளைப்பான் கோதுமை + கொண்டைக்கடலை (1:1) - காய்  துளைப்பான் தாக்குதல் குறையும் ஆமணக்கு + தட்டைப்பயிறு -  அசுவினி தாக்குதல் குறையும்.
  • பருத்தி விதையை ராகி, கம்பு பயிருக்குமுன் உழவு செய்யாமல், நேரடியாக  தண்ணீர் விட்டவுடன் கையினாலே விதைக்கலாம். (கோயமுத்தூர்).
  • பச்சை புகையிலை 1-5 - 2.0 கிலோ எடுத்து 5-6 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, நல்ல அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அதில் 4-5 லிட்டர் வடிகட்டிய நீருடன் 70-80 லிட்டர் நீர் சேர்த்து சோயாபீன்ஸ் ள (ப்சை காய் புழு தாக்கப்பட்ட பயிரில்) தெளித்தால் கட்டுப்படுத்தலாம். இதுபோல் 5-6 நாட்கள் இடைவெளி விட்டு செய்யவேண்டும்.
  • அசுவினி தாக்கப்பட்ட பயிர்களில் வேப்பங்கொட்டை சாறு அல்லது பூச்சிக்  கொல்லும் இலைகளின்சாற்றை தெளிக்கலாம் (உத்திராஞ்சல்).
  • பருத்தியுடன் சுற்றி ஏக்கருக்கு 100 ஆமணக்கு விதையை ஊன்றி வளர்த்தால், படைப்புழுவானது அகன்ற இலையான ஆமணக்கு இலையில் முட்டையிட்டும் பின் அந்தப் புழுக்கள், ஆமணக்கு இலையை சேதப்படுத்தும் / உண்ணும் ள அத்தகைய இலைகளை பிடுங்கி அழிப்பதில்  பருத்தி செடி பாதுகாக்கப்படுகிறது (ஆந்திரப்பிரதேசம்).
  • பருத்தியில் பூச்சித் தாக்குதலுக்கு, 500 கிராம் வேப்பங்கொட்டை, 100 கிராம் புகையீலை, 100 கிராம், 250 கிராம் பெருங்காயம்  50 கிராம்  விதைகளை  இடித்து சாறு எடுத்து ஒரு ஏக்கருக்கு தெளித்தால் பருத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்ததலாம் (தமிழ்நாடு).
  • கோமியம் மற்றும் பசுமாட்டு சாணம் இவற்றை தண்ணீர் கரைத்து, சில நாட்கள் வைத்திருந்து வடிகட்டி, தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சகளும், இலைவெட்டி  பூச்சியும் கட்டுப்பட்டு, பயிர் நன்கு  வளரும் (சாணி - சத்துக்கள் கொடுக்கவும்) கோமியம் - பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது (கர்நாடகா).
  • பருத்தி, மிளகாய், எலுமிச்சையில் ஏற்படும் பூஞ்சாணங்களைக் கட்டுப்படுத்த, பஞ்சகாவ்யாவை தயாரித்து (5:2:1/2:2: 1/2 - பால், தயிர், நெய், கோமியம், சாணி என்ற விகிதத்தில் 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, 7 நாட்கள் வைத்திருந்து தெளிக்கப்பயன்படுத்துதல்) தெளிக்கலாம். இதனால் மேலும் இலை உதிர்வதும் தடுக்கப்படுகிறது. பூக்கள் நன்றாக காய் பிடிக்க செய்கிறது (தமிழ்நாடு).
  •  பெரிய கும்முட்டிகாய், பிரண்டை கொடி, மஞ்சள் அரளி விதை, வேப்பங்கொட்டை இவற்றை அரைத்து, விழுது தயாரித்து அப்படியே 10 நாட்கள் வைத்திருக்கவேண்டும். அத்துடன் 10 நாள் ஆன தக்கைப் பூண்டு அதைதத விழுதையும் சேர்த்து, மெல்லிய துணியினால் வடிகட்டி, அதில் தண்ணீர் சேர்த்து  தெளித்தால் பருத்தியை தாக்கும் வெட்டுப்புழுவை திறம்பட எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுப்படுத்தலாம் (தமிழ்நாடு).

கரும்பு

  • அதிக மகசூல் கரும்பில் பெற, நடவுக்கு முன் குளத்து மண்ணை இடுதல்.
  • ஆட்டு கிடை வைப்பது அல்லது ஆட்டு புழுக்கயையை உரமாக இடுவதால் சர்க்கரை அளவு கூடும்.
  • கரும்பு சோகை உரிப்பதால் செதில் பூச்சி மற்றும் மாவு பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • அடிக்கடி நீர் கட்டுவதால், கரையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • செங்கல் சூளைச் சாம்பலை 2-3 மாதம் ஆன கரும்புப் பயிரில் இடுவதால், இளந்தண்டு துளைப்பான் தாக்குதல் கட்டுப்படும்.
  • வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கை தூளாக்கி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வடிகட்டி, பயிர் மீது தெளித்தால் இளந் தண்டு துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • 200 கிலோ / எக்டருக்கு காய்ந்த வேப்பம் பழத்தை தூளாக்கி, இட்டால் தண்டு துளைப்பான் மற்றும் பூஞ்சாண நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது, கரும்பு சாற்றை வாயகன்ற இரும்பு கொப்பரையில் ஊற்றி 1 மணி நேரம் கொதிக்க வைக்கவேண்டும். பின் சமையல் சோடா உப்பை இட்டு தூசிகளை நீக்கி, பின் கலர் பவுடரை போட்டு திரும்ப 1 மணி நேரம் தொடர்ச்சியாக கொதிக்க வைக்கவேண்டும். அப்போது அது மாவு பதம் வந்தவுடன் அச்சிலோ அல்லது கையினாலோ வெல்லம் பிடித்து தயாரிக்கலாம்.

வாழை

  • பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
  • விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
  • இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
  • 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
  • அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
  • கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும்.
  • கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
  • வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும்.
  • செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும்.
  •  சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும்.
  • வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும்.

மா

  • வேப்ப எண்ணெயைத் தத்துப்பூச்சி கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
  • மாந்தோப்பிற்குள் சூரியகாந்தியை பயிர் செய்தால், தேனீக்களை கவர்ந்து, அதிக மகரந்தசேர்க்கை நடந்து, மா மகசூல் அதிகரிக்கும்.
  • ஆவாரம் குலையை ஒரு அடுக்கு பரப்பி அதன் மீது மா காய்களை இட்டுபின் ஆவாரம் குலையைப் பரப்பினால், விரைவாக மா பழம் பழுக்கும்.

திராட்சை

  • பழுப்பு நிறமுள்ள 1/2 நிறமுள்ள நல்ல மொட்டு உள்ள தண்டுப் பகுதியை நடவுக்குப் பயன்படுத்தவேண்டும்.
  • கடலை புண்ணாக்கை ஊறவைத்து, கரைத்து, அக்கரைசலை 1 வாளி ஒரு குழிக்கு ஊற்றினால் நல்ல தரமான திராட்சையையும் அதிக மகசூலையும் பெறலாம்.
  • 10 அடி இடைவெளியில் நடவுக்கு 3 மாதத்திற்கு முன்பு குழித் தோண்டி, அதில் கொழிஞ்சி, அகேவ், எருக்களைக் போன்ற பசுந்தாள் இலைகளை இடு மண் கொண்டு மூடினால், அவை மட்கி விடும். பின் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
  •  ஒவ்வொரு திராட்சைக் கொடியைச் சுற்றி மழைக்காலத்திற்கு முன்பு வட்ட வடிவ குழித்தோண்டி அதில் பசுந்தாள் உரச்செடி மற்றும் தொழு உரத்தை 3:1 விகிதத்தில் இட்டு, மண் கொண்டு மூடினால், நல்ல மகசூல் பெறலாம்.

கொய்யா

  • அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த 2 கிலோ நறுக்கிய எருக்களை இலையை 3 கி வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து 20 லிட்டர் தண்ணீரில் 4 நாள் ஊறவைத்து, பின் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

எலுமிச்சை

  • இறந்த நாயை, வேர்ப்பகுதியில் புதைத்தால் எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஒரு வாளி / மரம் என்ற அளவில் பன்றி எருவை இட்டால், பூ உதிர்தல் தடுக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
  • வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • 500 கிராம் காய்ந்த வேப்பம்பழத் தூளை ஒரு மரத்திற்கு இட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

சாத்துக்குடி

  • தண்டு துளைப்பான் தாக்கிய மரத்திலுள்ள ஓட்டைகளை கழுவி சுத்தம் செய்து, சுண்ணாம்பு கரைசலில் தோய்த்த பஞ்சை அதில் அடைத்து விடலாம் அல்லது லெமன் கிராஸ் புல்லை ஓட்டையை சுற்றி இடவேண்டும்.
  • சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, பூக்கும் பருவத்தில் மரத்தைச் சுற்றி 2 அடி அகலத்திற்கு பச்சை சோற்று கற்றாழை செடித் துண்டுகளை இடலாம்.
  • எறும்புத் தொல்லையை தடுக்க, விதையுடன் சாம்பல் கலந்து வைக்கலாம்.

பாரம்பரிய பழ இரகங்கள்

கொய்யா – நாட்டு இரகம்

அன்னாசி பழம்

ராம் சீதா (அனோனா ரெடிகுளேட்) – லோக்கலர் அனோனா இரகம்

செங்கவர்காய் (மா -சிவப்பு )

செட்டி ஒட்டு

 

மலை வாழைப்பழம்

  • கற்பூரவள்ளி பழம் சின்னதாக, சாம்பல் பூசியபடி இருந்தால் அதிக நீர்ச்சத்துடன் சுவை குறைவாக இருப்பதோடு குறைந்த விலைக்கே போகும்.
  • விவசாயிகள் பயிரிடும் செவ்வாழையை மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்.
  • மலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு சேய் மரத்தை மட்டும் விட்டு ஒவ்வொரு வருடமும் திரும்ப வாழைக்கட்டையை நடாமல் பயிரிடலாம்.
  • புதிய வேர்கள் விரைவாக விட்டு வளர வாழைக்கட்டைகளில், வேரை நடுவதற்கு முன் வெட்டி நடவு செய்யவேண்டும்.
  • ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் தொங்கும் வாழை இலையை அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால் வாழையில் கரும்புள்ளி நோய் நிழலினால் ஏற்படும். மேலும் காற்றினால் மரங்கள் சாயவும் வாய்ப்பு உண்டு.
  • ஒவ்வொரு கிலோ வேப்பம் புண்ணாக்குத் தூள் மற்றும் புகையிலைக் கழிவை தனித்தனியாக 5 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்டி பின் அவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வாழைக்கட்டையை நனைத்து நட்டால், நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம்.
  • வாழை வாடல் நோயை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட வாழையை வெட்டி எரித்துவிடவேண்டும். மேலும் அக்குழியால் 1-2 கிலோ சுண்ணாம்பு தூளை இடவேண்டும்.
  • விரைவாக விழாக் காலங்களில் பழுக்கவைக்க, வாழைக் குலைகளை பெரிய மண்பாண்டங்களில் வைத்து, அதில் நல்ல வாசனையுள்ள ஊதுப்பத்தியைக் கொளுத்தி வைத்து, அதன் வாய்ப்பகுதியை துணியினால் கட்டி வைக்கவேண்டும்.

பாரம்பரிய வாழை ரகங்கள்

பாளையங்கோடன்

நேந்திரன்

செவ்வாழை : சிவப்பு வாழை

மட்டி

 

பிளம்ஸ்

  • பிளம்ஸ் பழங்களை மூங்கில் கூடைகளில் அடைக்கும்போது, அதில் ‘பேன்’ வகை இலைகளை (இடைவேளை) போட்டால், பழம் பழுப்பது தாமதப்படும். ஏனெனில் மெதுவாகவே காயும்.

பலாப்பழம்

  • பலாப்பழத்தை பழுக்க வைக்க, காம்புப் பகுதியில் சிறிது துளைப்போட்டு, சின்ன குச்சியை சொருகி 3-5 நாட்கள் அப்படியே வைத்தால் பழுத்துவிடும்.

பாரம்பரிய பலா இரகங்கள்

பலா பழம்

வரிக்கை சக்கை பலா

கூளன் சக்கை பலா

முளகுமூடு

 

தக்காளி

  • சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.
  • 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
  • 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
  • பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.
  • பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.
  • பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.
  • காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.
  • அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.
  • சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

பாரம்பரிய காய்கறி வகைகள்

குழிதக்காளி (தக்காளி)

வழுதளங்காய் -முட்டை தாவர / கத்தரி்

கண்ணாடி கத்திரி – காட்டு கத்திரி

பொய்யூர் கத்திரி- உள்ளூர் கத்திரி ரகம்

ராமநாதபுரம் குண்டு மிளகாய் (மிளகாய் எஸ்பிபி)

வெண்டை / வெண்டிக்காய் - -சிவப்பு வெண்டை

கோவைக்காய் (காக்சீனியா)

காந்தாரி மிளகாய் - கோல்கொண்டா மிளகாய்

மணத்தக்காளி -சொலானம் நைக்ரம்

 

தெர் கொத்தவரை - உள்ளூர் கொத்தவரை இரகம்

கருப்பு அவரை – கருப்பு பீன்ஸ்

நாட்டு அவரை ( உள்ளூர் பீன்)

நாட்டு பூசணி – பூசணிக்காய்

கருவேப்பிலை

வெற்றிலை

ஜாவ்னா முருங்கை

மொச்சைப்பயறு (அவரை)

கத்தரி

  • கத்தரிப்பழ அழுகலைத் தடுக்க, 8 சோற்றுக் கற்றாழை இலையை நசுக்கி 1 லிட்டர் தண்ணீரில் தெளிக்கவேண்டும்.
  • காய் துளைப்பானை கட்டுப்படுத்த, கனகாம்பரம் செடியை வரம்பு செடியாக பயிரிடவேண்டும்.
  • கோழி எருவை கத்தரி வயலில் இட்டால், அதிக மகசூல் கிடைக்கும்.
  • 40 கிலோ வேப்பங்கொட்டையை தூளாக்கி, நடவு செய்த 35 நாள் கழித்து இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • கத்தரி தோட்டத்தில் ஆமணக்கு செடியை வரப்பு பயிராக நட்டால் அதுவே பூச்சிகளைக் கவரும் செடியாக இருந்து, பூச்சித்தாக்குதலை தடுக்கும்.
  • கத்தரியுடன் வெங்காயத்தை ஊடுபயிராக போட்டால், அநேக பூச்சிகளை (காய் துளைப்பான் உட்பட) கட்டுப்படுத்தலாம்.
  • இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கு மற்றும் சோற்றுக் கற்றாழையை இரண்டையும் நன்கு இடித்துத் தூளாக்கி அதை 10 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து, தெளித்தால் போதும்.
  • சாம்பலையும், மஞ்சள் தூளையும் சம அளவில் கலந்து, அதை செடிகளின் மீது தூவினால் அசுவினி தொல்லைக் கட்டுப்படும்.
  • சுண்ணாம்புத் தூளைத் தூவினால், மாவுப்பூச்சி தாக்குதல் தடுக்கலாம்.
  • அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த, கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால், செஞ்சிலந்தி மற்றும் புள்ளி வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

மிளகாய்

  • மிளகாய் விதையை சாண எரிவாயு கலன் கழிவில் ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து விதைத்தல் விதை வீரியமாக முளைத்து நன்கு வளர்வதோடு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குகிறது.
  • ஆட்டுக்கிடை அமர்த்தினால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • கடலை புண்ணாக்கு இடுவதால், பூ உதிர்வது தடுக்கப்படுவதோடு மகசூல் அதிகரிக்கும்.
  • அதிக பூக்கள் பெறவும், பூ உதிர்வதை குறைப்பதற்கு, பெருங்காயத்தை ஏக்கருக்கு 1 கிலோ வீதம் எடுத்து, துணியில் கட்டி வாய்க்காலில் வைக்கவேண்டும்.
  • ஆமணக்குப் பயிரை வரப்பு பயிராக பயிர்ச் செய்தால் அது புகையிலை வெட்டுப்புழுவை கவரும்.
  • 5 மிளகாய் வரிசைக்கு 2 வரிசை மக்காச்சோளம் அல்லது சோளம் நடவு செய்தால் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • முள் செடி இலைச்சாற்றை இரண்டு மாதம் ஆன செடியில் தெளித்தால் இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய் அழுகலை கட்டுப்படுத்தலாம்.
  • வேம்பு, அரளி, நொச்சி, துளசி மற்றும் எருக்களை இலைகளை இடித்து அதை வடிகட்டி அந்தச் சாற்றை தெளிப்பதால் இலைச்சுருள் நோய், வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்துவதோடு, நன்றாகசெடி வளரும்.
  • வில்வம் இலைச்சாற்றை தெளிப்பதால் அடி அழுகல் நோய் கட்டுப்படுத்தலாம்.

முருங்கை

  • முருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை கிள்ளிவிட்டால் அதிக கிளைகள் உண்டாகும்.
  • முருங்கை கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த மண்ணில் வேர் அருகில் விரல் வடிவ பெருங்காயத்தை வைத்தால் போதும்.
  • இலை கழிவு மற்றும் இதர கழிவுகளை மரத்தின் அடிப்பாகத்தில் போட்டு எரித்தால், கம்பளிப்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செடி முருங்கையில் 3 தடவை மறுதாம்பு பயிர் விடலாம்.

வெள்ளரி

  • 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை இரவு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை செடிக்கு 200 மிலி வீதம் ஊற்றினால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • அசுவினி மற்றும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த சாம்பலை தூவலாம்.
  • நன்கு முற்றிய பழுத்த பழங்களில் விதைகளை எடுத்து அதை தண்ணீரில் கழுவி, சாம்பல் கலந்து காயவைத்து சேமித்தால், ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.

புடலை

  • விதைகளை சாணிப்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து விதைத்தால், விதைகள் விரைவாக முளைப்பதோடு வறட்சி காலத்தைத் தாங்கி வளரும்.
  • பூ உதிர்தலைத் தடுக்க 25 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் நீர் என்ற விகிதத்தில் கலந்து கட்டுப்படுத்தலாம்.
  • புடலை அறுவடை முடிந்தவுடன், மீதமுள்ள இலைத்தழைகளை மண்ணில் மடக்கி உழுதால் அது உரமாக மாறும்.

பீர்க்கை

  • பீர்க்கை காய்மீது உள்ள வரிகளை வைத்து அவை இனிப்பாக அல்லது கசப்பாக இருக்கும் என கண்டுபிடிக்கலாம். இரட்டைப்படையில் இருந்தால் இனிக்கும் அவை ஒற்றைப் படையில் இருந்தால் கசக்கும்.

பாகற்காய்

  • பாகல் விதையை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு பாலில் ஊறவைத்து விதைத்தால் விதை வேகமாக முளைத்து நன்றாக வளரும்.

காலிப்பிளவர்

  • வேப்ப எண்ணெயை நீரில் (30 மிலி / லிட்டர்) கலந்து, தெளித்தால் காலிப்பிளவரில் தோன்றும் ‘டைமண்ட்’ பூச்சியை (Diamond back meth) கட்டுப்படுத்தலாம்.

பீன்ஸ்

  • நாட்டு கலப்பைக்குப் பின்னால் விதை விதைப்பு, மானாவாரி பீன்ஸ் சாகுபடிக்குபின் செய்தல்.
  • பயிர் வளர்ச்சியின் போது பூச்சித்தாக்குதல் வராமல் இருக்கவேண்டும் என்றால் விதையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துப்பின் செம்மண் மற்றும சாம்பல் கலவைகளில் கலந்து, வெயிலில் காயவைத்து விதைக்கப் பயன்படுத்துதல்.
  • பூச்சித் தாக்கப்பட்ட பயிர்களின் புதிய அடுப்புச் சாம்பலைத் தெளித்தல்.

பூசணி

  • பூசணி விதைகளைக் காய்ந்த பூசணி காயையே சேமிப்பு கலமாக பயன்படுத்தலாம். ஆம், நன்கு  பழுத்த காய்ந்த பழத்திலுள்ள விதைகளை எடுத்து, அதை சாம்பலுடன் கலந்து பின் அந்தக் காயிலேயே வைத்துப்பின் அதன் சிறுதுளை மங்கும் காற்றோட்டத்திற்கு விட்டு ஈரமான செம்மண் வைத்து பூசி, சேமிப்பு சுலபமாக உபயோகிக்கலாம்.

சுரைக்காய்

  • நன்கு முறிந்த காய்ந்த காய்களை அப்படியே சூரியஒளியில் காய வைத்து பின் அப்படியே காய்ந்த பழத்தில் சேமிக்கலாம்.
  • விதைகளை தண்ணீரில் ஊறவைத்து பின் துணியில் கட்டி வைத்தால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
  • பக்க கிளைகளை கிள்ளி விடுவதால், அதிக சம்பு /கிளைவிட்டு நல்ல தரமான காய் கிடைக்கும்.

 முட்டைக்கோசு

  • அடிக்கடி நாற்றாங்காலிலும், வயலிலும் நன்றாக கோசுக்கொடி வரும்.
  • முட்டைக்கோசு நடவுச் செய்த வயலில், அடிக்கடி களைடயெடுப்பு செய்தால், முட்டைக்கோசு அறுவடைக்கு முன்பே வரும்.
  • கிலோ சுண்ணாம்பை 2-3 லிட்டர்  மோரில் கலந்து, ஒவ்வொரு வார இடைவெளியில் விளக்குமாறுக் கொண்டு தெளித்தல் முட்டைக்கோசு புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

முள்ளங்கி

  • உருளைக்கிழங்கு சாகுபடி செய்தபின் முள்ளங்கி நடவு செய்தால் செலவு குறையும்.
  • மானாவாரிப் பயிராக முள்ளங்கியை நடவுச் செய்தால், நிலத்தில் இருக்கும் ஈரத்தையே நன்கு எடுத்து பயிர் நன்கு வளரும்.
  • உருளைக்கிழங்கு சாகுபடிக்கு  பின் முள்ளங்கி நடவு செய்தால் எந்த உரமும் போடத் தேவையில்லை. நிலத்தில் உருளைக்கிழங்கு போட்ட உரமும் இதற்கு இருந்து உதவும்.
  • முள்ளங்கி அறுவடை செய்த பின் தண்ணீர் கழுவினால், நல்ல விலை கிடைக்கும்.

பீட்ரூட்

  • பீட்ரூட் கேரட் பயிருடன் ஊடுபயிராக செய்தால், சிறிதளவு பயிர் கவனப்பே போதும், ஏனெனில் கேரட் செய்யும் கவனிப்பே இதற்கு போதும்.
  • விதை உபயோகத்தில் நல்ல பெரிய காய்களைத் தேர்வு செய்யவேண்டும்.
  • நல்ல தரமான பீட்ரூட்டைப் பெற செய்யவேண்டும்.

கேரட்

  • கேரட் பயிரை உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை பயிர் மாற்றி பயிர் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் ஏனெனில் ஒரே பயிர் சாகுபடி செய்தால் விளைச்சல் குறையும்.
  • அருகிலுள்ள காடுகளை கிடைக்கும் சிகை மரத்தின் மெலிந்த கிளைகளை பாதுகாப்பு அரணாக அமைந்தால், மண்ணரிப்பு தடுக்கலாம்.
  • மண்ணரிப்பைக் கட்டுப்படுத்த கல்சுவர், சரிவுக்கு குறுக்காக அமைக்கவேண்டும்.
  • நன்கு கொத்தி, கட்டிகளை உடைத்தால் மேலே மண் கீழும், கீழ் மண் மேலும் வரும் வயலின் சேரட் நடவுக்கு பின்பு
  • சாம்பலையை கோமியத்துடன் கலந்து தெளிந்தால், இலைத்தத்துப்பூச்சியை கொல்லலாம்.
  • சில நேரம் செடியை பிடுங்கி, அது நன்கு முற்றி ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அறுவடையை ஆரம்பிக்கலாம்.
  • அறுவடை செய்தபின், தண்டு மற்றும் இலைகளை கால்நடை உணவாகவோ உரம் தயாரிக்க பயன்படுத்தி அடுத்த பயிருக்கு ள உரமாக இடலாம்.

உருளைக்கிழங்கு

  • உருளைக்கிழங்கு பயிருக்கு  பின்பு வேறு காய்கறிப்பயிர்களை நடவு செய்தால் நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • உருளைக் கிழங்கை சாகுபடி செய்தால் மண் தரம் அதிகரிக்கும்.
  • உருளைக்கிழங்கு பயிரை செண்டுமல்லியுடன் கலந்து கலப்புப்பயிராக செய்தால் வேர் நூற்புழு கட்டுப்படும்.
  • பயிர் சுழற்சியாக உருளைக்கிழங்கை மாற்ற பயிருடன் செய்தால் பூச்சி மற்றும் நோய் தாக்கம் குறையும்.
  • உருளைக்கிழங்கு பயிருடன் முட்டைக்கோசு / முள்ளங்கி / கொண்டைக்கடலை பயிருடன் பயிர் சுழற்சி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
  • உருளைக்கிழங்கு பயிரை மற்ற பயிருடன் பயிர் சுழற்சி செய்தால் நல்ல மகசூலும் வருமானமும் கிடைக்கும்.
  • நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில்  பயிர் சுழற்சி செய்தால் நல்ல மகசூலும்  வருமானமும் கிடைக்கும்.
  • உழவிற்கு முன்பு அதிக அளவு தொழுஉரம்  இட்டால் அதிக எண்ணிக்கையினால் கிழங்கைப் பெறலாம்.
  • மண்ணுக்கு இடும் இயற்கை பொருட்களுடன் (amendments) தொழுஉரம் இட்டால் முடிச்சு நூற்புழுவின் தாக்கம் குறையும்.
  • கைக்கொத்து வைத்து, நிலத்தைக் கொத்தினால், அடிமண்ணில் நன்கு சூரியஒளிபடும்.
  • தண்டுப் பகுதிகளில் மண் அணைப்பு செய்தால், பெரிய உருளைக்கிழங்கை பெறலாம்.
  • நடவு செய்த 90-100 நாட்களுக்கு பின்பு, உருளைக்கிழங்கின் இலைகள் மஞ்சள் / பிரவுன் நிறமாக மாறியபின் அறுவடை செய்யலாம்.
  • கிழங்குகளை அறுவடை செய்வதற்கு பின் தரைக்கு மேலுள்ள தண்டுப்பகுதியை வெட்டினால் கிழங்கு அறுவடை எளிதாக இருக்கும்.
  • ஐந்து பெரிய கிழங்குகளுக்குக் குறைவான கிழங்குகள் ஒரு செடியில் உருவாகி இருந்தால் அது குறைவான மகசூல் அந்தக் காலத்தில் கிடைத்தது எனலாம்.
  • 10 பெரிய கிழங்குகளுக்கு அதிகமாக ஒரு செடியில் கிடைத்தால் அது அதிக மகசூல் கிடைத்ததற்கு அறிகுறியாகும்.
  • உருளைக்கிழங்கின் கண்களை (சரிவுக்கு சமமாக) சரிவில் ள நடவுச் செய்தால், நீர் படிப்பை குறைத்து, நல்ல வடிகால் வசதியை மழைக்காலத்தில் கொடுக்கும்.
  • 8 அடிக்கு 4 அடி அகலத்தில் சிறிய குழிகளை கடைமடையில் ஏற்படுத்தினால் அதில் சேரும் வடிநீரானது பாசனத்திற்கு பயன்படும்.

பாரம்பரிய கிழங்கு பயிர் ரகங்கள்

நாட்டு மரவள்ளி கிழங்கு (வெள்ளை பொந்தா) – மரவள்ளி கிழங்கு

கருப்பு பொந்தா ( கருப்பு மரவள்ளி கிழங்கு)

கறியிலை பொரியன் (மரவள்ளிக்கிழங்கு)

அடுக்கு முட்டான் (மரவள்ளி கிழங்கு)

நாட்டு சீனி கிழங்கு – சேனை கிழங்கு

மல்லிகை

  • நாட்டு மல்லி என்று அழைக்கப்படும் நாட்டு இரகம், பூ சிறியதாகவும், அதிக வாசனை உள்ளதாகவும் சிறிய காம்புள்ள மல்லிகைப்பூ வாசனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும், தொழுஉரம் அல்லது ஆட்டை கிடை போடுவதால் மண்ணின் வளத்தை சேமிக்கலாம்.
  • அனைத்து விதமான பூச்சிகளை கட்டுப்படுத்த, மல்லிகைக்கு, 1 கிலோ அரளி பழத்தை ஒரு நாள் நீரில் ஊறவிட்டு பின் அதை கசக்கி, சாறு எடுத்து அதை தண்ணீருடன் 1க்கு 10 என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
  • 5 கிலோ ‘ஒடுவன்தலை’ இலை, கிளைகளை 2 லிட்டர் நீரில் கொதித்து வைத்து, அது ஒரு லிட்டர் ஆக குறையும் வரை கொதிக்க வைத்து அதில் 50 மிலிக்கு 15 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மல்லிகைத்தோட்டத்திற்கு அடித்தால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
  •  நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு பவுடர் ஒவ்வொரு செடிக்கு இடவேண்டும்.
  • நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மல்லிகை செடியை கவாத்து செய்யும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினால், ஆடுகள் பழைய இலைகளை உண்டு விடும். இதனால் புதிய தளிர்கள் உருவாக வாய்ப்புக்கள் உண்டாக்கும்.

பாரம்பரிய மலர்  இரகங்கள்

பாரம்பரிய ஜாதி முல்லை

பாரம்பரிய முல்லை (மல்லிகை முல்லை)

ராமநாதபுரம் குண்டுமல்லி (மல்லிகை சாம்பாக்)

ரோஜா

  • பூ மொட்டு உதிர்வதைத் தடுக்க, முட்டை ஓட்டை தூளாக்கி, செடிக்கு 100 கிராம் வீதம் இடவேண்டும்.
  • முட்டை ஓடு, கறிக்கடை கழிவுநீர், வெங்காயத் தோல் முதலியவற்றை ரோஜா செடிக்கு இட்டால் பூப் பூப்பதை விரைவுப்படுத்துவதோடு  அதிக பூ மகசூலும்  கிடைக்கும்.
  • அதிக நாட்கள் பூக்காத ரோஜா செடியைக்கூட, 15 நாட்கள் நொதிக்க வைத்த சாணிக் கரைசலை தெளிப்பதால் 10 நாட்களிலே பூக்க ஆரம்பிக்கும்.
  • செதில் பூச்சிலைக் கட்டுப்படுத்த, சாணிப்பாலில் தோய்த்த பழைய துணியை செதில் பூச்சி உள்ள இடங்களில் தேய்ப்பதாலும், காய்ந்த அதிகம் பாதித்த கிளைகளை அகற்றுவதாலும் பூச்சிகள் கட்டுப்படும்.
  • பூக்களின் பூ இதழ் உதிர்வதைத் தடுக்க, பூவின் நடுவில் ஒரு சொட்டுத் தேங்காய் எண்ணெய் வைப்பதால் ஒரு நாள் வரை பூ உதிராமல் இருக்கும்.

கனகாம்பரம்

  • கனகாம்பரத்தில் நூற்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த, காய்ந்த சிவப்பு அரளிப்பூவை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.
  • வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நூற்புழு தாக்கம் கட்டுப்படும்.

செண்டுமல்லி

  • சித்திரை பட்டத்தில் செண்டுமல்லி சாகுபடி செய்தால் குறைந்த அடர் வளர்ச்சி கிடைப்பதால், அது சிறிய பூக்களே உருவாக்கும். ஆனாலும் அதிக மகசூல் கிடைப்பதோடு அதிக லாபமும் கிடைக்கும்.
  • கடலைப் புண்ணாக்கை தூளாக்கி இட்டால் அதிக மகசூல் கிடைப்பதோடு பெரிய பூ கிடைக்கும்.
  • நட்ட 2 மாதத்திற்கு பின்பு, நுனியைக் கிள்ளி விடுவதால் அதிக கிளை தோன்றும்.
  • பறித்த அன்று சந்தைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால், பூக்களை கோணி பையின் மேல்பரப்பி அதன் மீது நீர் தெளித்து வெள்ளை துணியை போர்த்தி வைத்தால், வாடாமல் இருக்கும்.
  • அதிக பூ மகசூல் பெற தொழுஉரத்தை ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இடவேண்டும்.
  • 5-6 மாதங்கள் ஆன செவ்வரளி செடியை 1-2 அடி உயரம் விட்டு கவாத்து செய்ய வேண்டும். அதனால் 5-6 வருடங்கள் வரை புதிய கிளைகளும்  தோன்றி நல்ல மகசூல் கிடைக்கும். கவாத்து 4 வருட இடைவெளியில் இருமுறை செய்யலாம். அதன் செடியைப் பிடுங்கிவிட்டு, வேறு செடி நடவுச் செய்தல் நல்லது.

பாரம்பரிய நறுமண பயிர் வகைகள்

குடம்புளி– கார்சினியா கம்போஜியா

மஞ்சள்

நாட்டு மிளகு – மிளகு

ஜாதிக்காய் – ஜாதிக்காய் மிரிஸ்டிக்கா நறுமணம்

மிளகு

  • காட்டு மிளகு எனப்படும் இரகம், 2-3 வருடத்திற்கு ஒரு முறை மகசூலைத் தருவதோடு, அதிக காரத்தன்மையோடு இருக்கும். அது வனப்பகுதியில் மட்டுமே இந்த இரகம் இருக்கிறது.
  • ‘கரிமுண்டான்’ எனப்படும் நாட்டு இரகம், உயர்ந்த மலைப்பகுதிக்கு ஏற்றதும் குட்டையான பூ தண்டு கொண்டதும் ஆகும்.
  • மிளகு நன்கு காய்ந்துவிட்டதை அறிய, அதை பல்லில் கடித்தால் உலோக கடி ஓசை போல் உண்டாவதை கொண்டு அறியலாம்.
  • வெள்ளை மிளகு தயாரிக்க, மிளகு பழத்தை செடியிலேயே நன்கு பழுக்க வைத்து அதைப்பின் சேகரித்து, தொட்டியில் இட்டு, கால்களால் மிதித்தால் தோல் நீக்கிவிடும் பின் அதைக் கழுவினால் வெள்ளை மிளகாக இருக்கும். அது மருந்துக்கு பயன்படும்.

ஏலக்காய்

  • ‘வழுக்கை் இரக ஏலக்காய், அதிக மழை பெறும் இடங்களுக்கு ஏற்றது. அது நிமிராத சாயாத பூத்தண்டுடன் வரி இல்லா மொக்கை காய்களை கொடுக்கும்.
  • ஏலக்காய் விதைகளை அறுவடை செய்தவுடன் விதைத்தால் நல்ல முளைப்புத் திறன் கிடைக்கும்.
  • வேப்பம் புண்ணாக்கு மற்றும் புகையிலை கழிவு கலவையின் கரைசலை தெளிப்பதால் காய் துளைப்பான் மற்றும் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படும்.
  • அறுவடை செய்த ஏலக்காயை, சுத்திகரித்து அதாவது பச்சை கலர் மாறாமல் செய்து, பின் விற்றால் நல்ல விலைக்கு கிடைப்பதோடு தரமாகவும் இருக்கும்.

சுத்திகரித்தல் செய்வது என்பது புகைமூட்டி செய்வதே. ஒரு அறையில்  4 வரிசை என்ற  அளவில் 11 தட்டுக்களை  மணல் சலிக்கும் வலை மீது வைத்து செய்யவேண்டும். முதல் நாள் காலை 400C அளவு 1 மணி நேரம் வெப்பப்படுத்தி பின் 1 மணி நேரம் ஜன்னலைத் திறந்து வைக்கவேண்டும். இரண்டாம் முறையாக 600C  வெப்பநிலையில் 5 மணி நேரம் சூடுபடுத்தி 2-3 மணி நேரம் சன்னலைத் திறந்து வைக்கவேண்டும். பின் மூன்றாம் முறையாக இளஞ்சூடு  10 மணி நேரம் வைத்திருந்து இரண்டாம் நாள் மாலை வரை தட்டுக்களை அப்படியே வைத்திருக்கவேண்டும். மொத்தமாக 30-36 மணி நேரம் சுத்திகரிக்க ஆகும்.

பூண்டு

  • ‘சிங்கப்பூர் சிவப்பு’ எனப்படும் நாட்டு இரகம் ‘பெரும்பூண்டு’ என்று அழைக்கப்படுகிறது. அது 41/2 மாதம் வயதுடையது. அது சிவப்பு தோலுடன் கூடிய பெரிய பல் கொண்டதும் குறைந்த நீர்ச்சத்து உடையதும் அதிக நாள் இருப்பு வைக்கக்கூடிய இரகம்.
  • ‘மலைப்பூண்டு’ ஒரு நாட்டு இரகம். அது 4 மாதங்களில் வளரக்கூடிய பெரிய பல் கொண்டதும் அதிக காரத்தன்மை உடையதும் அதிக நீர்ச்சத்து கொண்டதும் ஆகும்.
  • ஆட்டுக்கிடை அமர்த்துவதால் அதிக மகசூல் தரும்.
  • வேர்ப்பூச்சியின் தாக்குதலை வேப்பம்புண்ணாக்கு 4 கிலோ ஒரு ஏக்கருக்கு  இடுவதால் குறைக்கலாம்.
  • சரியான நேரத்தில் அறுவடை செய்யவேண்டும். இல்லையெனில் பூண்டுபல் சேதாரம் எற்படும். எனவே இலைகள் இளம் பச்சையிலிருந்து மஞ்சளாகவும் மேலேயிருந்து காய ஆரம்பித்து, தழை தொங்கியவுடன் அறுவடை செய்யலாம்.

தென்னை

  • எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம்.
  • தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும்.
  • 5-6 இலைவிட்ட 6-8 மாதங்களான தென்னை நாற்றை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
  • தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும்.
  • தென்னை நடவுச் செய்வதற்கு முன்பு, வேரையெல்லாம் வெட்டி செய்தால், புதிய வேர் விரைவாக விட ஏதுவாகும்.
  • அரை வட்டக் குழி எடுத்து மரத்தைச் சுற்றி, எருக்களை 1 கிலோ, கொழிஞ்சி 1 கிலோ, 1 கிலோ பூதகள்ளி, 1 கிலோ மீன்கழிவு, 1 கிலோ, உப்பு 1 கிலோ இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • தேங்காய் மட்டையை, மரத்தைச் சுற்றில் மண்போர்வையாக இடுவதால் முண் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, களையை கட்டுப்படுத்தலாம்.
  • தென்னை தோட்டத்தில் தென்னைக்கு ஊடே உள்ள பகுதியை ஜீன் - ஜீலை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதத்தில் உழவுசெய்தால் வேர் பகுதியில்  நல்ல காற்றோட்டம் கிடைப்பதோடு, களையைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்ப எண்ணெய் தெளிப்பதால் பூ உதிர்தலை குறைக்கலாம்.
  • குரும்பை உதிர்வதை தடுக்க சாதாரண உப்பை வளர் நுனிப்பகுதியில் மரத்திற்கு 2 கிலோ வீதம் மழைக்காலத்தில் இடவேண்டும்.
  • குரும்பை உதிர்வதை தடுக்க சாம்பலை இடவேண்டும்.
  • குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்த, பூப்பதற்கு முன்பு மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி எடுத்து அதில் கொழிஞ்சி மற்றும் எருக்களையை இடலாம்.
  • பூச்சி மற்றும் எறும்பு தொல்லையை தடுக்க, நடவுக்கு முன்பு வேப்பம் புண்ணாக்கைக் குழிகளில் இடவேண்டும்.
  • தண்ணீர் மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த மண் பாண்டங்களை அங்காங்கு தென்னை தோப்பிற்குள் சிறிய குழிகளில் வைத்திருந்தால் மூன்று நாட்களுக்குப் பின்பு, அதிலிருந்து கிளம்பும் வாடையினால் காண்டாமிருக வண்டு கவரப்பட்டு பானையில் விழுந்து இறந்து விடும்.
  • வேப்பம் புண்ணாக்குச் சாற்றை வளர் நுனியிலும், அதற்கடுத்த ஓலையிலும் கொட்டுவதால் காண்டமிருக  வண்டின் தாக்கதலைத் தடுக்கலாம்
  • தண்டு கூண் வண்டின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த துளை ஏற்பட்ட பகுதியில் சுத்தம் செய்து சாதாரண உப்பை நிரப்பி பின்பு மூடிவிடவேண்டும்.
  • தென்னை நாற்று நடும்போது 1-2 கிலோ உப்பை குழிகளில் கொட்டினால், கரையானைக் கட்டுப்படுத்துவதோடு ஈரப்பதத்தைக் காக்கலாம்.
  • தென்னை நடவு செய்யும்போது ஒரு ‘அகேல்’ இலைக் குழிகளில் நட்டால் ஈரப்பதம் காக்கப்படுவதோடு கரையான் தாக்குதலையும் தடுக்கலாம். தென்னைந்தோப்பில், நீரை அதிகம் தேக்கினால் கரையான் எல்லாம் நீரோடு அழிந்துவிடும்.
  • தென்னை மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 2-3 அடி வரை சுண்ணாம்பு பூசினால் கரையான் தாக்குதல் கட்டுப்படும்.
  • கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த, 500 கிராம் சாதாரண உப்பை 5 லி தண்ணீரில் கலந்து தண்டின் ஊற்றினால் போதும்.
  • கோழிகளை தென்னந்தோப்பில் வளர்ப்பதால், அவை கரையானை தின்றுவிடும்.
  • தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பசுந்தாள் உரச்செடியாக கொழிஞ்சி அல்லது தக்கைப்பூண்டு செடியை வளர்த்து, மடக்கி உழலாம் அல்லது வேப்பம் புண்ணாக்கை நன்கு மட்கிய தொழு உரம் இட்டபின் இட்டு விடலாம்.
  • தென்னை தண்டு செவ்வொழுகல் (stem bleeding) யைக் கட்டுப்படுத்த ஒழுகல் பகுதியில் வாயை சுரண்டி சுத்தம் செய்து அதன்பின் சுண்ணாம்பு கரைசலை ஊற்றவேண்டும்.
  • மரத்தின் மீது எலி மற்றும் அணில் ஏறுவதைத் தடுக்க மரத்தின் அடியிலிருந்து 2-3 அடி உயரத்தில் சீமைக் கருவேல் கிளையைவோ முள் கம்பிவேலி சுற்றி கட்டினால் போதும்.
  • சிறிது நாட்டுக் சக்கரையை தேங்காய் எண்ணெயில் இட்டால் தூசுக்கள் எல்லாம் தனியாகப் பிரிந்து, எண்ணெய் தெளிவாக இருக்கும்.

இஞ்சி

  • வரப்பு ஓரங்களில் உள்ள இஞ்சி கிழங்குகளை விதைக்கப் பயன்படுத்தல்.
  • விதைப்புக்கு முன்பு சுண்ணாம்பு தூளைப் போட்டால், பூச்சி தாக்காது.
  • பச்சை அல்லது காய்ந்த பசும் இலைகளை, இஞ்சி நடவு செய்ய வயலில் போட்டால், களை தொந்தரவு இல்லாதது மட்டுமல்லாமல் நிழலாக இருக்கும்.

பாக்கு

  • பெரிய விதைகளை 2:1 என்ற விகிதத்தில் மணல் மற்றும் மண் கலந்த சோக்கு ள பையில் வைத்து 2-3 வாரத்திற்கு தெளித்து வந்தால் 30 நாட்களில் முளைக்கும்.
  • அருகில் கிடைக்கும் மரக்கிளைகளையே, நிழல் வலையாக அமைத்தால் இளஞ்செடிகளை அதிக மழை, சூரிய ஒளி மற்றும் பணியிலிருந்து காக்கலாம்.

எலுமிச்சைப் புல் (Lemon Grass)

  • மண் அரிப்பை கட்டுப்படுத்த வரப்பு பயிராக செய்யலாம்.
  • அறுவடை செய்தவுடனே எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தவேண்டும்.

 

யூகலிப்டஸ் : தைலமரம்

  • விதை நாற்றாங்காலை இடும் சூரியஒளி, பனி, கனமழைகளிலிருந்து காக்க அருகில் கிடைக்கும் மரக்கிளைக்கு ளகொண்டு கூரைப் போடலாம்.

முள் முருங்கை

  • நடவு செய்த குச்சிகளின் மேல் மண் பூச்சு செய்தால், விரைவில் வேர் விட ஆரம்பிக்கும்.

புகையிலை

  • புகையிலை தோட்டத்தில் தோன்றும் ‘ஒரபாங்கி’ புல்லை கட்டுப்படுத்த, அது முளைக்கும் குருத்தின் மீது கடலை எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் ஒரு துளி வைத்தால் போதும்.
  • புகையிலை தேமல் நோயைத் தடுக்க, 5 லிட்டர் பாலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, நட்ட ஒரு மாதம் ஆன புகையிலை செடி மீது தெளிக்கவேண்டும்.
  • அகல இடைவெளியில் நடவு செய்தால், அதிக மகசூல் பெறலாம்.
  • அதிக மகசூல் பெற, ஆட்டுக்கிடை அமர்த்தவேண்டும்.
  • 8-10 இலைகள் விட்டவுடன், புகையிலையில் நுனிக் கிள்ளுதல் (இலையுடன் தோன்றும் பூவை) செய்யவேண்டும்.
  • புகையிலை வெட்டுப்புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாற்றை அடிக்கலாம்.
  • புகையிலை ‘ஒரபாங்க்கே’ களையை கட்டுப்படுத்த சோளம் அல்லது எள் செடியை கவர் பயிராக பயிரடலாம்.
  • புகையிலை தேமல் நோயைக் கட்டுப்படுத்த, 50 மிலி மோருக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம்.

காப்பி

  • அரை கிலோ சாணத்தை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, நாற்றாங்கால் மீது தெளித்தால் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
  • காப்பியை வாழை - காப்பி, பலா - சாத்துக்குடி, காப்பி, சாத்துக்குடி - காப்பி - மிளகு  என்றதொரு அடுக்கு முறையில் பயிர் செய்யலாம்.
  • ஒவ்வொரு காப்பிச் செடியைச் சுற்றிலும் அரை வட்ட வடிவ குழி எடுத்தால், ஈரப்பதத்தை காக்கலாம்.
  • ஏப்ரல் - மே மாதங்களில், காப்பித் தண்டின் மீது தென்னை நார்க் கயிறுக் கொண்டு தேய்ப்பதால் தண்டு துளைப்பான் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • காப்பிக் கொட்டையை துளைப்பான் ஒரு காப்பித் தோட்டத்திலிருந்து இன்னொன்றிற்கு கோணி சாக்கு மூலமே பரவுகிறது. எனவே, கோணி சாக்கை வேப்பங்கொட்டை கரைசலில் மூழ்கவைத்து, நனைத்து நன்கு காய வைத்து பயன்படுத்தவேண்டும்.
  • வாடல் நோயை கட்டுப்படுத்த சுண்ணாம்புத்தூளை இடவேண்டும்.
  • நூற்புழு தாக்ககுதலுக்கு எதிர்ப்புள்ள இரகம் ‘ரோபஸ்டா’ இரகம்.
  • நோய் தாக்காத நல்ல வளர்ச்சி உள்ள காப்பிச் செடியிலிருந்து விதையைச் சேகரித்து, விதைக்க பயன்படுத்தலாம்.
  • நல்ல தரமான காப்பிக் கொட்டை, 3வது அல்லது 4வது அறுவடையின் போது கிடைப்பதே.
  • ஏக்கருக்கு 3 கிலோ புண்ணாக்கு, 6 கிலோ நாட்டு செண்டு மல்லியை தனித்தனியாக தண்ணீரில் 3 நாள் ஊறவைத்துப்பின், அதை கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து, 15 நாள் இடைவெளியில் 2 முறை அடித்தால் காப்பி கொட்டைத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

தேயிலை

  • தேயிலை தோட்டத்தில் ஏதம் புல் வகையை வரப்புகளில் நட்டால்  மண்ணரிப்பைத் தடுக்கலாம்.
  • மிக உயரமான பகுதியில் தேயிலை நட்டால் நல்ல தரமான தேயிலையைப் பெறலாம்.
  • மிக உயரமான பகுதியில் தேயிலை நட்டால், குறைந்த மகசூல் தரும்.
  • தேயிலையுடன் ‘காவேரி’ இரக காப்பியை ஊடுப்பயிராக நட்டால் நன்றாக வளரும்.
  • தேயிலை விதைகளை ஒரு அடுக்கு மணல் படுக்கையில் நட்டுப்பின் அதன் பின் ஒரு அடுக்கு மணல் போட்டு, நீர் விட்டால் / தெளித்தால் 3 வாரத்தில் நல்ல முளைப்பைப் பெறலாம்.

வேளாண் காடுகள்

  • தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதியின் வறட்சியைத் தாக்கி, வளரக்கூடிய பழைய மரங்களான, பனை, ஓடை முள், புளி மற்றும் வேம்பு ஏற்றது.
  • கருமண் பகுதியில் 25 அடி இடைவெளியில் நடப்படும் புளி மரத்திற்கு இடையில் 2 வரிசை சவுக்கு நட்டு, புளி விளைச்சலுக்கு வரும் முன்பே சவுக்கை வெட்டி இலாபம் பெறலாம்.
  • ‘சீமைக்கருவேல்’ மர விதை விரைவாக முளைக்காது, ஆனால் ஆடு தின்று அதன் புழுக்கையிலிருந்து வரும் விதை விரைவாக முளைக்கும். எனவே அப்படிப்பட்ட விதையை முளைக்க / விதைக்க பயன்படுத்தலாம்.
  • மலைவேம்பு விதை துரிதமாக முளைக்க, அதை நீர்விட்ட பசுமாட்டுச்சாணத்தில் கலந்து ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தவேண்டும்.
  • தேக்கு விதையை இரவு முழுவதும் ஊறவைத்து பின் 12 மணி நேரம் நிழலில் உலர்த்தவேண்டும். இது போல் 7 நாட்கள் செய்த பின் கடைசியாக சாணக் கரைசலில் ஒரு நாள் ஊறவைத்து விதைக்கப் பயன்படுத்தினால், விரைவாக முளைக்கும்.
  • குச்சி நடவு செய்யும்போது, வேர்ப்பகுதியில் கரையான் சேதாரம் ஏற்படாமல் தவிர்க்க, ராகியை நடவுக் குச்சியை சுற்றி இடவேண்டும்.
  • மரத்தில் கரையான் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மரத்தின் அடியில் சோற்று  கற்றாழை நடவேண்டும்.
  • இளம் மரங்களை ஆடுகள் மேயாமலிருக்க, சாணிக்கரைசலை இலைத்தழைகளின் மீது தெளிக்கவேண்டும்.
  • நடவு செய்யப்பட்ட வேப்பங்கன்றை ஆடுகள் கடிக்காமல் இருக்க வைக்கோல்  கயிறு கொண்டு சுற்றி பின் சீமைக்கரு வேல் வேலி போல் சுற்றி அதன் மீது சாணிக் கரைசலை தெளித்தால் போதும்.
  •  15 ஆண்டு ஆன வேப்ப மரந்தோப்பிலுள்ள மரத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு 1 இலட்சம் இலாபம் வரை வருமானம் ஈட்டலாம்.
Updated on Dec, 2014

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014